search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் நீக்கம்
    X

    மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் நீக்கம்

    • மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்
    • மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    திருச்சி:

    அந்தநல்லூர் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது . இதுகுறித்து உறுப்பினர்கள் கலெகடருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் அதில் , மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும் , உரிய ஆவணங்கள் இன்றியும் , போலியான ரசீதுகள் மூலம் ரூ l.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது.

    ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203 ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205 ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் , பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம் , அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவா விகனேஷ்வரன் என்பவரை 1994 ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 , உட்பிரிவு 11 - ன்படி , 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த கடிதத்தில் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    Next Story
    ×