search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstration"

    • சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டையில் வானமாதேவி செல்லும் சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் அவ்வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ம் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுந்தரபாண்டியன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமர், செந்தில்குமார், அக்ரி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தேர்தல் காலத்திலும், ஜாக்டோ-ஜியோ மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், வரும் டிசம்பர் 28-ந்தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்திலும் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 75 பெண்கள் உட்பட 200 கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் தொடர் திருட்டு சம்பவங்க ளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் கைது செய்து பொதுமக்களிடம் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது
    • புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது

    எட்டயபுரம்:

    தமிழ்நாடு ஏ. ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது.ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,200 ஓய்வூதிய திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி சமூக ஆர்வலர் முத்தரசு , ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் முனியராஜ் , கட்டிட சங்கத் தொழிலாளர் ராஜா, முத்துபாண்டி, சத்தியசெல்வி , ஆனந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
    • நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வரும் அருள்மணி என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை கே.டி.சி. நகர் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று வக்கீலால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக கூறி போலீஸ் ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதற்கிடையே வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருப்பதாக கூறி நெல்லை மாவட்ட வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏட்டு பிபினை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.

    இந்நிலையில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாரதி முருகன், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் முத்துராஜ், உதயகுமார் வழக்கறிஞர்கள் முன்னாள் செயலாளர் செந்தில் குமார் அமல்ராஜ், வினோத் குமார், ராஜா முகமது, லெட்சுமணன், ரமேஷ்,இசக்கி, கார்த்திக், தம்பான், அருண்குமரன், ராஜன்,அஜீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    மேட்டூர்:

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி பஸ் நிலையத்தில் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், நங்கவள்ளி நகர செயலாளர் நடராஜ், மாதர் சம்மேளன மாவட்ட பொருளாளர் அம்பிகா, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் வேம்பன், விஜயமாணிக்கம், சாம்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி சந்திரன், சஞ்சீவி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
    • கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆத்துப்பாலம் பள்ளிவாசல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை தொகுதி தலைவர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஞ்சை காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெ டுக்க இந்தியர்கள் அ னைவரும் ஒருங்கி ணை ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் தஞ்சை தொகுதி செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட தொண்டரணி தலைவர் முகமது சிராஜுதீன், தொகுதி இணை செயலாளர் முகமது தாஹிர், தொகுதி துணை தலைவர் முகம்மது சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார்.

    அப்போது சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து காலமுறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்துறை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்கிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது.

    மன்னார்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை. அருள்ரா ஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு ரூ.5 ஆயிரம் பண்டிகை கால உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் நாளை (சனிக்கி ழமை) மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் மஞ்சக்குப்பம் அம்பேத்கார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் மாநில மாவட்ட செயலாளர் செந்தில், முற்போக்கு எழுத்தாளர் சங்க பால்கி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி னார்கள். இதில் கல்வி மணி, நாகராஜ், ரபேல் ராஜ், புஷ்பா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் தலை வர் விஜய குமார் நன்றி கூறினார்.

    • அறந்தாங்கி அருகே கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
    • இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.

    அறந்தாங்கி 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் இயங்கி வரும் அரசு கூட்டுறவு நூற்பாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கனவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் மற்றும் முன்பனம் கிடையாது என நிர்வாகம் கூறியிருப்பதை கண்டித்து ஆலை வாசல் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தற்காலிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ், முன்பணம் மற்றும் இனிப்பு பலகாரம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன், டி.எம்.பி.டி.எஸ். மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×