search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு  கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×