என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில், எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
- பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
- கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆத்துப்பாலம் பள்ளிவாசல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை தொகுதி தலைவர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஞ்சை காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெ டுக்க இந்தியர்கள் அ னைவரும் ஒருங்கி ணை ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தஞ்சை தொகுதி செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட தொண்டரணி தலைவர் முகமது சிராஜுதீன், தொகுதி இணை செயலாளர் முகமது தாஹிர், தொகுதி துணை தலைவர் முகம்மது சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






