என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Demonetisation"
மேற்கு வங்க மாநில நிதி மந்திரி அமித் மித்ரா புதுடெல்லியில் நடந்த இந்திய சர்வதேச ஏற்றுமதி கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு 59 நிமிடத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்று கூறுவது மோசடியானது. இந்த திட்டத்தின் கீழ் இணைய தளம் மூலம் நாட்டில் எங்கிருந்தாவது ஒருவர் கடன் பெற்று இருக்கிறாரா? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் இந்திய ஜிடிபி-யில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில அரசில் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது.
இந்த இழப்பை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்தை விட இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளது.
பணமதிப்பிழப்பு, விவசாயிகள் மற்றும் முறைப்படுத்தப்படாத தொழில்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசு ஸ்திரமாக உள்ளதாக நம்ப சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளையும், தோல்வி அளிக்கும் முடிவுகளையும் எடுக்கிறது. சிறுகுறு நிறுவனங்களின் மனதில் பொருளாதார தேக்கம் நிலவுகிறது என்ற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போபால்:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் தியோரி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்கப் போவதாக பிரதமர் மோடி பேசி வந்தார். இப்போது தன்னை நாட்டின் காவலாளி என்றும், ஊழலை ஒழிக்க தான் பாடுபட்டு வருவதாகவும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இப்போது அப்படி கூறினால் நீங்கள் நாட்டின் காவலாளி இல்லை. திருடன் என்று மக்கள் கூறி விடுவார்கள்.
பிரான்சிடம் இருந்து தலா ரூ.526 கோடி வீதம் 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் விமானப் படையிடமோ அல்லது அப்போதைய பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரிடமோ ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை மோடி ரத்து செய்தார்.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தையும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ள அவர் பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்ததாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்காக ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானிக்கு மோடி வழங்கியுள்ளார். நாட்டின் காவலாளி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மோடி இதன் மூலம் சில தொழில் அதிபர்களின் காவலாளியாக மாறி விட்டார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் ஆகும். அப்போது நேர்மையாக, வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அனைவரையும் மோடி வங்கிகளின் வாசலில் நிற்க வைத்தார். அப்போது அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்கள் யாரும் வங்கிகள் முன்பு நிற்கவில்லை.
கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் என்றால் பொதுமக்கள் மட்டும் ஏன் வங்கிகளின் முன்பு நின்றார்கள். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக சென்று அதனை மாற்றி விட்டார்கள்.
மக்களின் பணத்தை மோடி திருடி விஜய் மல்லையா, நீரவ்மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழில் அதிபர்களிடம் கொடுத்து அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்துள்ளார்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுமாறு மோடியிடம் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் தொழில் அதிபர்களின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்து வருகிறார். அவரால் மேலும் பல தொழில் அதிபர்கள் பலன் அடைய உள்ளனர்.
இந்தியாவில் தயாரிப்போம் என்பது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினாலும் 24 மணி நேரத்துக்கு 450 வேலை வாய்ப்புகளையே இந்தியா உருவாக்கி வருகிறது. ஆனால் சீனா 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். #rahulgandhi #pmmodi #demonetisation
சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.
ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.
தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.
கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.
சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.
இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.
பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறைகூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள் ளன. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரே குடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.
வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு தலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்தவகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.
ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.
இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண மதிப்பிழப்பின் மூலம் மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.என். கந்தசாமி, பி.வி. மணி, பச்சைமுத்து, கே.பி.எஸ். மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், கே.பி துரை, சவுந்தர்குமார், வக்கீல் கருப்பசாமி, பழையூர் செல்வராஜ், கே.வி.செல்வராஜ், ராமநாகராஜ், கோவை போஸ், காந்தகுமார், குணசேகரன், கே.என் வசந்த், ஜீ. ஆர். சீனிவாசன்,
ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, காட்டூர் சோமு, பட்டம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே. குமரேசன், விஜய் சாந்த், சர்ச்சின் சிவக்குமார், இதயம் ரகுமத்துல்லா, கேபிள் வினோத், மகளிர் காங்கிரஸ் தலைவி உமா மகேஸ்வரி, கார்த்தி, எம்.துளசி ராஜ், ராயல்.சி.மணி, பாசமலர் சண்முகம், விஜயகுமார், அசோக் குமார், கணேசன், சீரா கணேசன், கர்ணன், ஆனந்தன், காமராஜ் துல்லா, சாய் சாதிக், தங்கராஜ், எம்.எஸ். பார்த்தீபன், உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். சர்க்கிள் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், முன்னாள் மேயர் வெங்கடாசலம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காயத்ரி, விஜயகுமார், சின்னராஜ், ராமலிங்கம், திருமூர்த்தி, லாலிரோடு செல்வம், கோவிந்தராஜ், செல்வராஜ், வரதராஜ், குனிசை செல்வம், செல்வபுரம் ஆனந்த், தங்கதுரை, ஆகாஷ், மாரியப்பன், தங்கமணி கிருஷ்ணகுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #congress #demonstration #centralgovernment
தக்கலை:
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளதை கருப்பு தினமாக கருதியும், கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தக்கலை வட்டாரத்தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், சேம் செல்வக்குமார் உள்பட திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் தக்கலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #congress #centralgovernment #demonetisation
சென்னை:
மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மூன்றாம் ஆண்டான இந்த வருடமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடி கோடியாக பணம் வரும் என்று சொல்லி பணம் மதிப்பிழப்பின் மூலம் மக்களை தெரு கோடிக்கு கொண்டு வந்து விட்டது மோடி அரசு. மோடி பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறார்.
தற்போது எதிர்ப்பு அலை தான் வேகமாக வீசுகிறது. வருகிற தேர்தலில் மோடி ஆட்சியை காங்கிரஸ் வீழ்த்துவது உறுதி. இதற்காக மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கும்.
எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் நலிவடைந்துள்ளது. இந்த அரசு அகற்றப்பட்டால் தான் நாடு முன்னேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், டாக்டர் செல்லக்குமார், விஜயதரணி எம்.எல்.ஏ. தணிகாசலம், கஜநாதன், தாமோதரன், அசன் ஆரோன், சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்க் சிவராஜசேகர், வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம் மற்றும் நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், பி.வி.தமிழ்செல்வன், தணிகைவேல், பிரகாஷ், துரைசிங், ஜெகன், நாச்சிகுளம் சரவணன், தி.நகர் விக்னேஷ்வரன், சாம்டெனிசன், வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ்பாண்டியன், இல.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #demonetisation #thirunavukkarasar #congress
பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அதிரடியாக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.
இதுபற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறினார்.
சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் ரகுராம் ராஜனின் கருத்தை எதிரொலித்துள்ளார். அப்போது அவர், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல யோசனை என்று எந்தவொரு பெரும் பொருளாதார நிபுணரும் கருதுவார் என நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது ஏற்றதல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், “சரியாக வழிகாட்டாமல், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு தலைபட்சமாக ஏவிய ஏவுகணை இது” என சாடி உள்ளார். #Demonetisation #RaghuramRajan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்