என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "honesty"
- பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை கடையில் வைக்கப்பட்டது.
பாபநாசம்:
வாழ்க்கையில் எல்லோரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் மகாத்மாகாந்தி பிறந்தநாளில் ஆளில்லா கடை நேற்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பஸ் நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் ஆளில்லா கடையை திறந்து வைத்தார்.
முதல் விற்பனையை பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் பிரபாகரன், ஜெயக்குமார், மணிகண்டன், ராஜேந்திரன், ஜெயசேகர், காதர் பாட்ஷா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது.
அதன் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. இதில் பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை டப்பாவில் வைத்தனர்.
அதே போல் பணத்தை வைத்துவிட்டு சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து ரோட்டரி சங்க தலைவர் கே.எஸ்.அறிவழகன் கூறும்போது, மகாத்மாகாந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நினைவாக்கிட, எங்களது அமைப்பு சார்பில் காந்தி பிறந்த நாளில், நேர்மை குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 23 ஆண்டாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
இதில் விற்பனையாகும் தொகையை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, அதற்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆங்கில நாளேடு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது மீண்டும் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உள்ளது.
இதை கூடுதல் ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதுவும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என நேரடியாகவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜனதாவினர் மறுத்துள்ள நிலையில், உள்துறை மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங்கும் நேற்று மறுத்து உள்ளார். கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
எனது அரசியல் வாழ்க்கையில் யார் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் கூறியதில்லை. தூய்மையான அரசியலை தொடரும் நான், வார்த்தைகளை உபயோகிப்பதிலும், கண்ணியத்தை காப்பதிலும் எப்போதும் கவனமாக இருப்பேன்.
கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடியை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். மோடிக்கு எதிராக நீங்கள் வேறு குற்றச்சாட்டுகளை, அதாவது ‘அவர் குறைவாக உழைக்கிறார் அல்லது அதிகம் உழைக்கிறார்’ என்றோ, அவர் அதிகம் உழைத்திருக்க வேண்டும் என்றோ கூற முடியும். ஆனால் அவரது நோக்கம் மற்றும் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
மோடியின் நேர்மை மீது யாருக்கும் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவர் யாருக்காக சொத்துகளை குவிக்க வேண்டும்? எனவே மக்களை தவறாக வழிநடத்தி ஒருவர் அரசியல் செய்யக்கூடாது. அவர்களின் கண்ணில் மண்ணை தூவக்கூடாது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறைகூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள் ளன. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரே குடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.
வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு தலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்தவகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.
ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்