என் மலர்

    செய்திகள்

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
    X

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #congressdemonstratin
    திண்டுக்கல்:

    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் இன்னும் துன்பப்பட்டு வருவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் நாகல்நகரில் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் அரபுமுகமது, சிவாஜி, ராஜாஜி, சீனிவாசன், காஜா மைதீன், அஜித், அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நாளை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். #congressdemonstratin
    Next Story
    ×