search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dam"

    • பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.85 அடி யாக உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவா னிசாகர் அணை. அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் மழை பொழிவு குறைந்த தால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.85 அடி யாக உள்ளது. இன்று கா லை அணைக்கு 2,871 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலி ங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்ப ள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி யும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவா னிசாகர் அணை. அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதி யில் பரவலாக மழைபெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்து வந்தது. பின்னர் மழைப்பொழிவு குறைந்த தால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.83 அடியாக உயர்ந்து ள்ளது. இன்று காலை அணைக்கு 4,261 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இரு ந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோ ட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொட ர்ந்து திறக்கப்பட்டு வருகி றது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 29.05 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்- 20.57 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக வும் உள்ளது.

    • வினாடிக்கு 7,208 கனஅடி நீர் வருகிறது
    • கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.52 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 7,208 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியை நெருங்கி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் குறிப்பிடபட்டுள்ளது
    • பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்ப–டுவதால் அணை யின் நீர்மட்டமும் தொ டர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.90 அடியாக உள்ளது.

    அணை க்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொ ண்டிருக்கிறது. அணையில் இருந்து காலி ங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்ப ள்ளி- அரக்கன் கோட்டை பாசன த்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்க ப்பட்டு வருகிறது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 31.71 அடியா–கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 20.96 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்ம ட்டம் 22.05 அடியாகவும் உள்ளது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,594 கனஅடியாக அதிகரித்துள்ளது
    • ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 498 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனஅடியாக அதிகரித்து வருகிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    அரவிந்தசாமி, மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செ ல்வம், பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன், துணை அமைப்பாளர் மருது பாண்டியன், ஜெகதீஷ் விஜயலட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பா ட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.

    குறுவைப் பயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

    • மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறிவரும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று தொடர்ந்து கூறி வரும் கர்நாடக மாநில அரசை கண்டித்து தஞ்சை சின்ன ஆஸ்பத்திரி அருகே இன்று மதியம் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பார்வையாளர் முரளி கணேஷ், பொருளாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநில அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டும் முடிவை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதி நிலைப்பாட்டை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் அம்ரித் அரசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாநகரத் தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் கூறி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெங்களூரில் இன்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் இதுவரை பேசவில்லை. தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம் 19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு, கர்நாடகம் தர வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இந்த மாதத்திற்குரிய தண்ணீரும் சரியான முறையில் தரவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை ஒழுங்கான முறையில் கர்நாடக அரசு கொடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு முடிவை கண்டித்து வரும் 25ஆம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக அந்த மாதத்தின் இறுதியில் தான் தொடங்கியது.

    அனல் காற்று

    ஒரு சில நாட்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. மாறாக தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுவதோடு, அனல் காற்றும் வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வெப்பம் அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    பெரும்பாலானோர் சாலைகளில் நடந்து செல்லும் போது குடைகளை பிடித்தபடி செல்கின்றனர். மாநகர், புறநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், குளிர்பா னங்களை அருந்துவதற்காக குளிர் பான கடைகளை தேடி மக்கள் கூட்டம் செல்வதை காண முடிகிறது. ஏற்கனவே கோடையில் சுட்டெரித்த வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்டவை வறண்ட நிலையில் காணப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தின் போது நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் விவசாயி கள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு பயிரிடவில்லை. இதனால் தரிசு நிலங் களாக காட்சியளிக்கிறது. மேலும் குளங்களும் வறண்டு, வெடிப்பு விழுந்த நிலையில் உள்ளது.

    • கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறி யானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் நடைபெறும் அகலங்கன்னு பாலத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளரிடம் கூறிய கலெக்டர் இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
    • வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.

    இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மேலும் 5 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், நாளை 10ந் தேதி முதல், 15-ந் தேதி வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

    • கொள்ளிடம் பாலத்தை தொடர்ந்து, காவிரி பாலத்திலும் ‘திடீர்’ விரிசல்
    • மக்கள் அச்சத்தை போக்க உடனே சீரமைக்க கோரிக்கை

    ஜீயபுரம்,

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. அவ்வாறு வரும் மேட்டூர் அணை நீர் திருச்சி திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நடைபெறும் காவிரி ஆற்றின் அருகில் கூம்பு போன்ற இட அமைப்பை கொண்டுள்ளது.அந்த பகுதியில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிந்து செல்வதால் இந்த பகுதி முக்கொம்பு என பெயர் பெற்று இன்று வரை திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலம் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த்தாகும்.

    இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக 5-வது முதல் 9-வது மதகு வரையுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டு உள்ளது.அதேபோல் காவிரி பாலமானது 42 மதகுகளைக் கொண்டதாகும். இந்த பாலம் கடந்த 1974 ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு கால கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அவ்வப்போது காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றும், வண்ணம் பூசும் பணியும் நடைபெறும. இந்த பாலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இதற்கிடையே காவிரி பாலத்தில் உள்ள 35-வது மதகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. குறிப்பாக இந்த பாலமானது தன்னுடைய பக்கவாட்டிலிருந்து விலகி மேற்கு பகுதி நோக்கி சாய்ந்துள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லேசான அளவில் கண்டறியப்பட்ட விரிசல் ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

    இதனால் காவிரி பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளதா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொதுபணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மேலணை காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்து பாலத்தின் முன் பகுதியில் இரும்பு தூண் கொண்டு தடுப்பு அமைத்தனர்.காவிரி பாலத்தின் விரிசல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நாளடைவில் இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் மற்றும வாழைக்காய் பாரம் ஏற்றிய லாரிகள் சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன.இந்த நிலையில் காவிரி பாலத்தில் பழுதான 35-வது மதகிற்கு அருகிலுள்ள 38-வது மதகு பகுதியில் பாலத்தின் பக்கவாட்டில் இருந்து புதியதாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பாலத்தில் மற்றொரு மதகுப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.பாலத்தின் அடிப்பகுதியில் காப்பர் பீம் போட்டு கட்டப்பட்டிருப்பதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் இயற்கையின் சீற்றத்தோடு ஒப்பிடுகையில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த பாலத்தை பலப்படுத்தி மக்கள் அச்சத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    • காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளன. இந்த 9 ஆண்டு காலத்தில் இந்தியாவில் பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். இன்னும் பல திட்டங்களை கொண்டு வர உள்ளார்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்ப டுகிறது. அனைவருக்குமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்து 53 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேப்போல் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

    தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார். விரைவில் தஞ்சை யில் விமான நிலையம் வர உள்ளது.

    மத்திய அரசில் பிரதமர் மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

    இதன் மூலம் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி, ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. இதேபோல மத்திய அரசும் அனுமதி தராது.

    கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி நடத்தபோது, அதை எதிர்த்து தமிழ்நாட்டில் தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

    இதேபோல காங்கிரஸ் அரசும் மேகதாதுவில் அணை கட்ட முயன்றால், தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தும்.காவிரியில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், ஊடகப் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாசம், மாவட்ட பொதுச் செயலாளர் வீரசிங்கம் மற்றும் துரை,

    மாவட்ட பொருளாளர் விநாயகம், ஊடகப்பிரிவு பார்வையாளர் செந்தில்,கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் கபிலன், விவசாய அணி மாவட்ட தலைவர் தங்கவேலு, தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன் மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், முரளி,பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    ×