search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து  2,594 கனஅடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,594 கனஅடியாக அதிகரிப்பு

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,594 கனஅடியாக அதிகரித்துள்ளது
    • ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 498 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனஅடியாக அதிகரித்து வருகிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×