search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
    X

    ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவா னிசாகர் அணை. அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதி யில் பரவலாக மழைபெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்து வந்தது. பின்னர் மழைப்பொழிவு குறைந்த தால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.83 அடியாக உயர்ந்து ள்ளது. இன்று காலை அணைக்கு 4,261 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இரு ந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோ ட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொட ர்ந்து திறக்கப்பட்டு வருகி றது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 29.05 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்- 20.57 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக வும் உள்ளது.

    Next Story
    ×