search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
    X

    ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் குறிப்பிடபட்டுள்ளது
    • பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்ப–டுவதால் அணை யின் நீர்மட்டமும் தொ டர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.90 அடியாக உள்ளது.

    அணை க்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொ ண்டிருக்கிறது. அணையில் இருந்து காலி ங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்ப ள்ளி- அரக்கன் கோட்டை பாசன த்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்க ப்பட்டு வருகிறது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 31.71 அடியா–கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 20.96 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்ம ட்டம் 22.05 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×