என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "criminal"
- 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
- இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கண்டியன் தெருவில் வசித்து வந்த சின்னதம்பி மகன் பிரபாகரன்.
இவரிடம் தஞ்சாவூர் மாவ ட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்குதெரு, கொல்லிபத்தை முகவரியில் வசி க்கும் ஜோதிவேல் மகன் இரனதிவே என்பவர் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததால் பிரபாகரன், இரனதிவே மீது பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து இரனதிவேக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து இரனதிவே பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மேல்மு றையீடு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றம் விதித்த தண்டணை சரியானது என்றும், இரணதிவேயை கைதுசெய்து சிறையில் அடைக்க கடந்த அக்டோபர் மாதம் 12 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொ டர்ந்து இரனதிவே கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.
- மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமை யியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த நீதிமன்றத் தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.
உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்தும் அபராத தொகை விதித் தும் மொத்தம் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் உரிமையியல் வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகளில் ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 241 பெறப்பட்டது.
கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.
கடந்த சில ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போதும் நிறைய கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2655 வேட்பாளர்களில் 883 பேர் தீவிர கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம்” என்றனர்.
இதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் சின்னத்தை மறுப்பது புதிய சட்ட சிக்கல்களை உருவாக்கும். மேலும் இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் செய்ய முடியும். இதில் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றனர்.
நீதிபதிகளின் இந்த கருத்துக்கு மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இது சட்டத்துக்கு எதிரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டும் என்றே கிரிமினல் குற்ற வழக்குகளை தொடுப்பார்கள். இது அரசியலில் அபாயகரமானதாக மாறி விடும்” என்றார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்கள்.
நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்க்க எங்களால் உத்தரவிட முடியும். அதன்படி ஒரு வேட்பாளர் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருப்பது தெரிய வந்தால், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிசின்னம் கிடையாது என்று அறிவிக்கலாம்” என்றார்.
இந்த யோசனைக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. #Supremecourt #criminal #election
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்