search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "administration officer"

    • கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகேயுள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது30). இவர் பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் வந்தார்.

    அவர் தான் பட்டா மாற்ற மனு செய்ததாகவும், அது இன்னும் தரப்படவில்லை என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஆவணங்களை பார்த்து பட்டா மாறுதல் சரி செய்து தருவதாக கணேஷ் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் கணேஷ் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    ×