மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமை யியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.
மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த நீதிமன்றத் தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.

உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்தும் அபராத தொகை விதித் தும் மொத்தம் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதில் உரிமையியல் வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகளில் ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 241 பெறப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com