என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டுக்கோட்டையில் ரூ.25 லட்சம் மோசடி வழக்கில் ஒருவர் கைது
- 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
- இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கண்டியன் தெருவில் வசித்து வந்த சின்னதம்பி மகன் பிரபாகரன்.
இவரிடம் தஞ்சாவூர் மாவ ட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்குதெரு, கொல்லிபத்தை முகவரியில் வசி க்கும் ஜோதிவேல் மகன் இரனதிவே என்பவர் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததால் பிரபாகரன், இரனதிவே மீது பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து இரனதிவேக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து இரனதிவே பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மேல்மு றையீடு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றம் விதித்த தண்டணை சரியானது என்றும், இரணதிவேயை கைதுசெய்து சிறையில் அடைக்க கடந்த அக்டோபர் மாதம் 12 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொ டர்ந்து இரனதிவே கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்