search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீது குற்றவியல்"

    • குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    ×