search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவியல்"

    • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கண்டியன் தெருவில் வசித்து வந்த சின்னதம்பி மகன் பிரபாகரன்.

    இவரிடம் தஞ்சாவூர் மாவ ட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்குதெரு, கொல்லிபத்தை முகவரியில் வசி க்கும் ஜோதிவேல் மகன் இரனதிவே என்பவர் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததால் பிரபாகரன், இரனதிவே மீது பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து இரனதிவேக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து இரனதிவே பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மேல்மு றையீடு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றம் விதித்த தண்டணை சரியானது என்றும், இரணதிவேயை கைதுசெய்து சிறையில் அடைக்க கடந்த அக்டோபர் மாதம் 12 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொ டர்ந்து இரனதிவே கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சட்டத்துறை அமைச்சரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

    கன்னியகுமரி:

    குமரி மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 19-02-2019 -ல் புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். மேலும், கன்னியாகுமரி மேற்கு கடற்கரையோரம் குறும்பனை முதல் நீரோடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.

    புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டதால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். ஆனால், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குள் நீதிமன்றம் இல்லாததால் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மேற்படி நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக நீதி கிடைக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதி யிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு துணை தாசில்தார் போல் கையெழுத்து போலியாக போட்டு பட்டா தயாரித்து கொடுத்து வந்ததால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் விவகா ரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலி பட்டா தயார் செய்து மக்களை மோசடி செய்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமை யியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்த நீதிமன்றத் தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.

    உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்தும் அபராத தொகை விதித் தும் மொத்தம் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் உரிமையியல் வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகளில் ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 241 பெறப்பட்டது.

    ×