search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counseling"

    • டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து கல்லூரி மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    இதில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்க வேண்டும். அத்துடன் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப்பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.

    கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டம்.
    • மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ பிளாக் தரைத்தளத்தில் நாளை (வியாழக்கிழமை)

    காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.
    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

    இதில் 2,025 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.

    இதைத் தொடர்ந்து, இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இது ஜனவரி 30-ந் தேதி வரை நடை பெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப் பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இணையவழி கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

    சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnau.ucan apply.com என்ற இணையதளம் மூலம் ஜனவரி 30-ந் தேதி மாலை 5 மணி வரை தங்களின் கல்லூரி, விருப்பப் பாடங்களை மாற்றிக்கொள்ளலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1-ந் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும் கலந்தாய்வுக் கான வழிமுறைகள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 0422 6611345 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்’ தேர்வு எழுதி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
    • விவசாய கூலித் தொழிலாளின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    சென்னை:

    பிள்ளைக்கு டாக்டர் சீட் வாங்க போறோம்... என்று ஊரில் இருந்து கிளம்புபவர்கள். கார் அல்லது ரெயிலில் பயணித்து சென்னையில் நல்ல ஓட்டலாக பார்த்து ரூம் போட்டு குளித்து மாற்று உடை உடுத்திக் கொண்டு பிரஷ்ஷாகி அட்மிஷன் வாங்க புறப்படுவார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் கார்களால் நிரம்பி இருக்கும். இடமில்லாமல் ரோட்டிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும்.

    கோட்-சூட் அணிந்தும், விலை உயர்ந்த புடவையிலும் பெற்றோருடன் பிள்ளைகள் வந்து குவிந்து இருப்பார்கள். அவர்களின் மிடுக்கான தோற்றமே டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வசதி படைத்த குடும்பத்தினர் என்பதை வெளிப்படுத்தும். இதைத்தான் கீழ்ப்பாக்கம் வளாகம் பார்த்து இருக்கிறது.

    ஆனால் இன்று புதுமையானவர்களை-உண்மையான உழைப்பாளிகளை அந்த வளாகம் விசித்திரமாக பார்த்தது.

    ஊரில் நாள் முழுவதும் சகதி நிறைந்த கந்தல் ஆடையுடன் விவசாய நிலத்தில் பாடுபடும் விவசாயிகள், கல், மண் சுமக்கும் தொழிலாளர்கள், இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு தறிக் குழிக்குள் நின்று துணி நெய்யும் நெசவாளிகள், இவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வு எழுதி அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.


    மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த நெசவு தொழிலாளி மகள் சங்கீதா

    மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த நெசவு தொழிலாளி மகள் சங்கீதா

    கிராமங்களில் இருந்து தாய்-தந்தையுடன் பஸ்சில் கோயம்பேடு வந்து இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்சை பிடித்து வந்திருந்தார்கள். கைகளில் சிறிய பை. கசங்கிய வேட்டி-சட்டையில் தந்தை, கசங்கிப்போன பழைய சேலையில் தாய், சாதாரண பேன்ட் சட்டையில் மகன், பொதுக்குழாயில் பல் துலக்கி முகத்தை கழுவி விட்டு கையேந்தி பவனில் ஒன்றிரண்டு இட்லியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு மர நிழல்களில் அமர்ந்திருந்தார்கள்.

    சென்னையின் கம்பீரம் அவர்களின் கண்களை கவர்ந்தது. நாகரீகம் அவர்களை ஆச்சரிய மூட்டியது.

    பார் பார் பட்டணம் பார் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி இந்த மாதிரி பட்டணத்தில் தான் நம் பிள்ளையும் படிக்கப்போகிறான் என்ற சந்தோசம் அவர்களின் முகங்களில் தெரிந்தது.

    கவுன்சிலிங் முறை வந்து மகனை உள்ளே அழைத்ததும் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் உடன் சென்றார்கள்.

    அங்கு மாணவனை அமர வைத்து கம்ப்யூட்டர் திரையில் கல்லூரிகளின் விபரத்தை காட்டினார்கள். ஆனால் எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் மருத்துவ துறை பணியாளர்கள் அய்யா, உங்கள் பகுதியில் இன்னென்ன கல்லூரிகளில் இடம் உள்ளது. எந்த கல்லூரி வேண்டும் என்று கேட்டனர்.

    அதைகேட்ட பெற்றோர் தங்கள் மகனிடம் 'அய்யா உனக்கு எந்த காலேஜ் புடிக்குதோ அதை எடுய்யா' என்றனர்.

    அத்துடன் அந்த ஊழியர்களிடம் "நல்ல காலேஜா பார்த்து குடுங்கய்யா" என்றும் கேட்டுக் கொண்டனர். இதுதான் ஒரு கிராமத்து தொழிலாளி வீட்டு டாக்டர் கனவு பலித்த காட்சி.

    அரியலூரை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பழனியாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    மகனுக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்து விட்டது என்றதும் அந்த ஏழைத்தாய் இரு கைகளையும் கூப்பிய படியே 'சாமி, என் புள்ளக்கி நல்ல வழி காட்டிவிட்டாய்' என்று கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

    என் மகனும் டாக்டருக்கு படிப்பான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. ஒதுக்கீட்டில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னான். அப்படியே நடந்து விட்டது என்றார்.

    மேலும் கார்த்திகேயனின் கன்னங்களை தடவியபடியே 'நல்லா படிக்கணும்யா. நீ டாக்டர் ஆகி என்னைப் போல் 60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கணும்யா' என்றார்.

    அந்த ஏழைத்தாயின் விருப்பத்தை கேட்டதும் அங்கு நின்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    அந்தியூரை சேர்ந்த நெசவுத்தொழிலாளியின் மகளான சங்கீதா கூறும்போது, "என் அம்மா-அப்பாவுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனாலும் நீட் தேர்வில் சாதிக்க முடியுமா என்று பயமாக இருந்தது. இப்போது அரசின் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததால் எங்கள் குடும்பமே கர்வம் கொள்கிறது" என்றார்.

    • 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.
    • 3-ம் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22ந் தேதி நடக்கிறது. கல்லூரியில் உள்ள 340 இடங்களில் 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.

    3-ம் கட்டமாக வரும் 22-ந் தேதி நடக்கும் கலந்தாய்வில் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே 'சீட்' நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, 26ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில், விண்ணப்பம் உள்ள மற்றும் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம். காலி இடங்களை பொறுத்தும் மதிப்பெண் அடிப்படையிலும் அனைவருக்கும் சேர்க்கை வழங்கப்படும். திருப்பூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என முதல்வர் நசீம் ஜான் தெரிவித்தார்.

    • இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை.
    • பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு நாளை 18-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    இதில் தரவரிசை எண் 1401 முதல் 2900 வரையில் உள்ள மாணவா்கள் பங்கேற்கலாம். தரவரிசைக்கான சோ்க்கை கடிதத்தை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துவர வேண்டும். மேலும், இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவா்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை.
    • 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.

    • மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக்கல்லூரியில்,2022--23ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் காலை 9.30 மணி முதல் 10.30வரை மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 6-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கும்,தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.குறிப்பிட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் தரவரிசை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதள முகவரியை பார்வையிடலாம்.

    சேர்க்கை பெற வரும் மாணவர்கள், அசல் டிசி,மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை,பாஸ்போர்ட் அளவு போட்டோ,ஜாதிச்சான்றிதழ், இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், தரவரிசை உள்ள கல்லூரி இணையதள பக்கத்தின் நகல், மூலச்சான்றிதழ் நகல் எடுத்து வர வேண்டும் இவ்வாறு கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.

    • கரூர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது
    • நாளை முதல் நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் (4-ந் தேதி) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிறது.

    கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி, தரகம்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை ( 5-ந் தேதி) சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 8 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் ம.ஹேமாநளினி தெரிவித்துள்ளார்.

    கரூர் அரசு கலைக்கல்லூரியில் 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு, 10-ந் தேதி தமிழ் ஆங்கிலம். 11-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல். 13-ந் தேதி வரலாறு, பொரு ளியல். 16-ந் தேதி விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவிஅமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து, உணவு முறைகள் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் எஸ்.கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.

    குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் ஆக. 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் அனைத்து பிரிவுக்கும், 10-ந் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும், 12-ந் தேதி வணிகவியல், 16 -ந் தேதி இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் அர.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதே போல் அரவக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரி முதல்வர் சுதா தெரிவித்துள்ளார்.

    ×