search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counseling"

    • ஜூன் 8 மற்றும் 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஜூன், 8 மற்றும், 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே, 31ல் துவங்கி, நேற்று (ஜூன், 6) வரை நடந்தது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாளை (8ம் தேதி) மற்றும், 9ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. வணிகவியல் பாடங்களான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு ஜூன், 8ம் தேதி காலை, 9:30 க்கும், பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பியல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது. வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை, 11:30 மணிக்கும், கணிதம், கணிணி அறிவியல், கணிணி பயன்பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டில் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல், அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

    உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:- 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற கலை மற்றும் வணிகவியல் பிரிவில் மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.தொடர்ந்து நேற்று இளநிலை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 27 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில்2 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்களும்,தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிபிஏ பாடப்பிரிவில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 110 பேர் சேர்ந்து உள்ளனர்.இன்று அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணியளவில் தமிழ்இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் , பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் , தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுதொடங்கியது
    • நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 பேருக்கு இடம் கிடைத்தது. பெரம்பலூர் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

    தலா 40 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 560 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் மொத்தம் 20 பேருக்கு இடம் கிடைத்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    • பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
    • 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகவே விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் இருந்தே அழைக்கப்படுவா். அழைக்கப்படுபவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்பும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களின் சான்றிதழ் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பள்ளியில் தேசிய மாணவா் படையில் 'ஏ' சான்றிதழ் பெற்றவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் பங்கு பெறலாம். முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபாா் தீவுகளின் தமிழா்கள் ஆகியோா் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள உரிய அசல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வருவோா் கட்டாயம் பெற்றோா் உடன் வரவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம் மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதே வேளையில், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது என அறிவிக்கபட்டுள்ளது
    • கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (மே.30) முதல் நடைபெறுகிறது. நாளை (மே.30) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன்.1-ம் தேதி வணிகவியல் (பி.காம்.,), ஜூன்.2-ம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், ஜூன்.5-ம் தேதி மொழிப்பாடம் (பி.ஏ.,) தமிழ், ஆங்கிலம், ஜூன்.6-ம் தேதி (பி.ஏ.,) வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இணைய வழி விண்ணப்பத்தின் நகல், 10, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் –2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்களுடன் பெற்றோருடன் நேரில் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
    • நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

    கோவை,

    கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கலந்தாய்வு நடை முறை நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 1-ந் தேதி வணிகப்பிரிவு பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    ஜூன் 2-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும், ஜூன் 3 -ந் தேதி பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இறுதியாக ஜூன் 5 -ந் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்தைக் காணலாம் என்று முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.

    • 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வு நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தற்போது தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் இன்று கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது.தொடர்ந்து 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூன் 1 முதல் 10 வரை பிற மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வும் நடக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி துவங்குகிறது. 

    • 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.9 தாலுகாவில் பாட வாரியாக 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல்3 நாட்களில் 200க்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால் கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றனர்.

    • அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் நாளை (22-ந்தேதி) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஒன்றியத்துக்குள் மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    இக்குழுவின் உறுப்பினர்க ளாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (கல்வியாளர்), கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 3-ம் நாளான நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், நாச்சிகுளம், இடும்பாவனம், இடையூர், புத்தகரம் ஆகிய பள்ளிகளுக்கான ஆலோசனை வழங்குதல் குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

    இப்பயி ற்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மன்னார்குடி வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் தனபாலன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் 125 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேஷ், அன்புராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வு களான தினந்தோறும் மீனாட்சியம்மன் 4 மாசி வீதிகளில் வீதிஉலா வருதல், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மை யாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்சு வசதி, தகவல் மையம், கண்காணிப்பு காமிராக்கள், தன்னார்வ லர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிவறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.

    திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை போக்கு வரத்து இடையூறின்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கே திருவிழாவை பார்க்க வசதியாக எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக டிரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடங்கள், மருத்துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் துணை ஆணையாளர் அரவிந்த், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன், செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, நகரப்பொறி யாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×