search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது
    X

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது என அறிவிக்கபட்டுள்ளது
    • கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (மே.30) முதல் நடைபெறுகிறது. நாளை (மே.30) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன்.1-ம் தேதி வணிகவியல் (பி.காம்.,), ஜூன்.2-ம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், ஜூன்.5-ம் தேதி மொழிப்பாடம் (பி.ஏ.,) தமிழ், ஆங்கிலம், ஜூன்.6-ம் தேதி (பி.ஏ.,) வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இணைய வழி விண்ணப்பத்தின் நகல், 10, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் –2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்களுடன் பெற்றோருடன் நேரில் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×