search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conflict"

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு விவசாயி. இவரது மனைவி செல்வமணி (வயது 43). இந்நிலையில் பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் நேற்றும் இவர்களுக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சளில் இருந்த செல்வமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த பாலகுரு வீட்டில் மயங்கி கிடந்த மனைவி செல்வமணியை மீட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக சிதம்பரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் செல்வமணியை சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வமணி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் பாலகுரு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
    • திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.

    இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வடமாநில தொழிலாளர்களுக்கிடையே மோதல்-இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம்
    • மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    இந்நிலையில் தர்மேந்தர் சர்மா என்பவரை சோட்டு, சச்சின் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதனை கேட்ட சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டார்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ஊர் பிரச்சினையில் படிக்கும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி கல்வி பாதிக்கப் படுவதோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் அருகே உள்ள நத்தத்துபட்டி, பொட்டல் பச்சேரியை சேர்ந்த சிலருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒருவரை யொருவர் தாக்குவதும், மோதிக்கொள்ளுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி சம்பவத்தன்று பொட்டல் பச்சேரியை சேர்ந்த ரடால்ப் சர்மா என்ற கல்லூரி மாணவர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நத்தத்து பட்டியை சேர்ந்த முக்தீஸ் வரன், சஞ்சய்பாண்டி, நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

    இதேபோல் சாத்தூர் சிலோன் காலனியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும், அணைக்கரைபட்டியை சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அம்மாபட்டி போலீசார் அந்த ஊரை சேர்ந்த கபிலேஷ், மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து ள்ளனர். மாணவர்கள் மோதலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • 4 பேரும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் நரேஷ் (வயது 25) .

    இவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ் ஆகியோருக்கும் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

    அதன் பிறகு இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவதன்று வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன்,மணிமாறன் உள்ளிட்ட4 நபர்களும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர்களான ராஜா, பாக்கியராஜ் வந்தனர். அவர்களையும் மணிகண்டன் கும்பல் தாக்கியது.

    பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ்,ராஜா,பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விக்னேஷ், மணிமாறனையும், மற்றொரு தரப்பில் ஒருவரையும் புதுப்பட்டினம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பவுன்ராஜ் ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (வயது 26), இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தில் தற்கொலை செய்து கொண்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
    • இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார்.

    சிவகிரி,

    சிவகிரியை அடுத்த அம்ம ன்கோயில் அருகே பூலக்காடு என்ற இடத்தில் அரசு மதுப்பா ட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை திறக்கும்வரை காத்திருக்க முடியாத மதுப்பிரியர்கள் காலையிலேயே அங்கு சென்று மதுவை வாங்கி அருந்துவது வாடிக்கை. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு விற்ற மதுவை வாங்க நாட்ராயன் என்ற நபர் சென்று ள்ளார். அப்போது அங்கே மது வாங்க வந்த வேறு ஒரு நபரை கண்ட நாட்ராயன் அந்த நபர் அங்கு வந்திரு ப்பது குறித்து அங்கே வந்த நபரின் உறவினருக்கு செ ல்போனில் தகவல் அளித்து ள்ளார்.

    இதனை கவனித்த அந்த நபர் இது குறித்து நா ட்ராயனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியு ள்ளது. இதில் நாட்ராயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரைத்து அனுப்பி யுள்ளனர்.

    தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் நாட்ராயன் சிகிச்சையில் உள்ளா ர். இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, பின்னர் அம்மன்கோயில் டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கு கடை திறப்பதற்கு முன்னரே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது ப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தனபதி. இவர்களுக்குள் முன்விரோதம் தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜபிரியா கொடுத்த புகாரின் பேரில் தனபதி, விஜயா, சரண்யா, ஜெயசூர்யா மீதும், ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம், மணிமேகலை, ராஜப்பிரியா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறை அருகே மூதாட்டி உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை - மகன்
    • தென்னை மட்டை விழுந்த தகராறில் மோதல்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண ப்பாறை வளநாடு கொடும்ப பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).இவரது மகன்கள் ராம சாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டை கள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழு ந்தது. இதனால் ஆத்திர மடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்கு மாரிடம் தகராறு செய்தனர்பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார்,தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்கு மார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.இதில் பலத்த காயம டைந்த 4 பேரையும் அக்கம்ப க்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்த னர்.தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் பெற்று விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

    இதில் மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், நிர்மலா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரி வித்த னர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×