search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defense mission"

    • செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
    • கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மெரினா கடற்கரையில் குதிரைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவதி, ஷாலினி என 2 சிறுமிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.அவர்களை குதிரைப்படை வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளனர்.

    இது தவிர குற்றச் செயல் களை தடுப்பதற்கும் குதிரைப்படை வீரர்கள் உதவி செய்து வருகிறார்கள். சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும் குதிரைப்படைக்காக குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1670-ம் ஆண்டு மாகாண கவர்னராக இருந்த வில்லியம் என்பவர் இந்த குதிரைப்படையை உருவாக்கினர்.

    அப்போது புதுப் பேட்டை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை, வேப்பேரி போலீஸ் நிலையம், பூக்கடை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 7 இடங்களில் குதிரைப்படை பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது புதுப்பேட்டை பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    இதையொட்டி 25 குதிரை களில் 11 குதிரைகள் குதிரை யேற்றத்தின்போது பிரத்தியேக பயிற்சி பெற்றவையாகும். மீதமுள்ள 14 குதிரைகள் குடியரசு தின அணிவகுப்பு, வி.ஐ.பி. பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

    மெரினாவில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர். செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கபாலி, காவேரி, சோழன், சாரதி, வைகை, தாமிரபரணி என குதிரைக்கு பெயர் வைத்துள்ளனர்.

    • அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
    • திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.

    இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×