search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் குடும்ப தகராறில் விவசாயி மனைவி விஷம் குடித்து தற்கொலை
    X

    சிதம்பரத்தில் குடும்ப தகராறில் விவசாயி மனைவி விஷம் குடித்து தற்கொலை

    • பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு விவசாயி. இவரது மனைவி செல்வமணி (வயது 43). இந்நிலையில் பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் நேற்றும் இவர்களுக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சளில் இருந்த செல்வமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த பாலகுரு வீட்டில் மயங்கி கிடந்த மனைவி செல்வமணியை மீட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக சிதம்பரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் செல்வமணியை சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வமணி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் பாலகுரு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×