என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கடலூர் அருகே முன்விரோத தகராறில் இரு குடும்பத்தினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு
By
மாலை மலர்3 Sep 2023 7:38 AM GMT

- சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தனபதி. இவர்களுக்குள் முன்விரோதம் தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜபிரியா கொடுத்த புகாரின் பேரில் தனபதி, விஜயா, சரண்யா, ஜெயசூர்யா மீதும், ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம், மணிமேகலை, ராஜப்பிரியா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
