என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மோதல்
- 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டார்.
- போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ஊர் பிரச்சினையில் படிக்கும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி கல்வி பாதிக்கப் படுவதோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் அருகே உள்ள நத்தத்துபட்டி, பொட்டல் பச்சேரியை சேர்ந்த சிலருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒருவரை யொருவர் தாக்குவதும், மோதிக்கொள்ளுவதும் நடந்து வருகிறது.
அதன்படி சம்பவத்தன்று பொட்டல் பச்சேரியை சேர்ந்த ரடால்ப் சர்மா என்ற கல்லூரி மாணவர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நத்தத்து பட்டியை சேர்ந்த முக்தீஸ் வரன், சஞ்சய்பாண்டி, நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.
இதேபோல் சாத்தூர் சிலோன் காலனியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும், அணைக்கரைபட்டியை சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அம்மாபட்டி போலீசார் அந்த ஊரை சேர்ந்த கபிலேஷ், மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து ள்ளனர். மாணவர்கள் மோதலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்