search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector's office"

    • கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
    • 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம்‌. எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • அளவீடு செய்த நிலத்திற்கு ஆவணம் கேட்டு முறையீடு
    • உதவி கலெக்டர் சமாதானம் செய்தார்

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் அடுத்த மலைகன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகா மில் கலெக்டர் குமாரவே ல்பாண்டியனிடம் " தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு மனைக்கான நிலத்தின் அளவை குறை வாக காண்பித்து பதிவு செய்து இருக்கிறார்கள்.

    அதை மாற்றவேண்டும், நிலத்தை அளவீடு செய்யவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தனது தந்தை அலைந்து, அலைந்து இறந்தே போய்விட்டார் என்று முறையிட் டார். மேலும் தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதையடுத்து கலெக்டர் வருவாய் துறையினரிடம் விஜயலட்சுமி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆலோசனையின்பேரில் சப் கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் ராமலிங்கம், சுதா, வட்ட வழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ஜெ யந்தி, சர்வேயர் திலீப்குமார், விஏஓ ரேணு மற்றும் உதவியாளர்கள் பள் ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் பா துகாப்புடன் அளந்து காண்பித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது தாயார் மற்றும் தங்கை ஆகியோருடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து 3 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நிலம் அளவீடு செய்ததற்கான ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆவணங்களை தரும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி 3 பேரும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் வல்லம்படுகை வல்லந்துறையை சேர்ந்தவர் செந்தமிழ் அரசி (வயது 30). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது- 

    நான் எனது குடும்பத்துடன் வல்லந்துறை பகுதியில் வசித்து வருகின்றேன். இந்த நிலையில் எனக்கு திருமணம் நடைபெற வேண்டி பல்வேறு குடும்பத்தில் வரன்கள் பார்த்துவந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். 

    இதன் காரணமாக நான் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்‌. இது வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் போலீசார் எங்களை மிரட்டும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    • பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • யாதவர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    சாலை மறியல்

    நாங்குநேரி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் கோசலை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முனைஞ்சிப்பட்டி ஊராட்சி கீரன்குளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழா ய்கள் அமைத்து தெருக்களில் தண்ணீர் பிடித்து வந்தோம்.

    தற்போது புதிய திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் இருந்த குழாய்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிரு ந்தனர்.

    சாக்கடை கழிவு நீர்

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல்காதர் கோயா தலைமையில் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கன்னிமார்குளம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தில் வார்டுக்கு உட்பட்ட 12 தெருக்களின் கழிவுநீர் கலக்கிறது. எனவே துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியவில்லை. எனவே கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தியாகராஜநகரை சேர்ந்த சமூகஆர்வலர் செல்வக்குமார் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும் போது அதற்கான முடிவுகள் உடனடியாக வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்கு பின்னர் கொடுக்கின்றனர். இதனால் நோயாளிகள் அடுத்தகட்ட சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக முடிவுகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    வீட்டு மனைப்பட்டா

    மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்க நிறுவனத்தலைவர் மாரியப்ப பாண்டியன் தலை மையில் ராமை யன்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வக்குமார், நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், ராமையன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட யாதவர் தெருவில் ஏராள மான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் ரூ. 70.57 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர்கள் குமார் ஜெயந்த், பிரபாகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, போக்குவரத்து பணிமனை ஆகிய பகுதிகளில் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல்ஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் 10 பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

    • சிறை வைக்கப்பட்டுள்ள மகளை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
    • தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). விவசாயியான இவர் இன்று காலை மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து போர்டிகோ வாசலுக்கு வந்த முனிராஜ் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு முனிராஜை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரை அங்கிந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    மகளை மீட்டுத்தர வேண்டும்

    இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் போலீசார் முனிராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், "என் மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலெக்டர் அலுவல கத்தில் விவசாயி மண் எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
    • எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மூதாட்டி வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவலரிடம் இருந்து மண் எண்ணை கேனை பிடிங்கி விசாரித்தனர். அப்போது அவர் ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியை சேர்ந்த பத்மா என தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது வீடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரில் உள்ளது. எனது அண்ணன் எனது வீட்டை ஒருவருக்கு மாத வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டார். வாடகை ஒப்பந்த அடிப்படையில் நான் கடந்த 14.7.2021 அன்று வீடு வாடகைக்கு கொடுத்தேன்.

    இந்த நிலையில் ஒரு சில பிரச்சினைகளால் வீட்டை காலி செய்ய சொன்னேன். இதற்கு அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு தான் காலி செய்வேன். அதற்கு முன்பு இங்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்.

    இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்காக சிலேட்டர் நகரில் உள்ள எனது வீட்டில் தங்கி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தற்போது அவர் வீட்டை காலி செய்ய மறுக்கிறார். மேலும் எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார். எனவே தாங்கள் விசாரணை நடத்தி எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திட்டக்குடி தொகுதி வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
    • மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம்.

    கடலூர் 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம் அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக தேர்தலில் பயன்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு அதில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து வருகின்றது.

    திட்டக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் 305, வாக்குப்பதிவு எந்திரம் 306 ,கட்டுப்பாட்டு கருவி 305 மொத்தம் 916 மின்னணு வாக்கு எந்திர பெட்டிகளை திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் , தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. 

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    இதில் 124 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வக்கீல் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது.
    • அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராயன், குரு ராமலிங்கம், சிவாஜிகணேசன், மன்சூர், சட்ட ஆலோசகர் திருமார்பன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

    கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது. இந்த இடம் புதுச்சேரி, சென்னை, பண்ருட்டி விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பிரதான சாலைக்கும் கஸ்டம்ஸ் சாலைக்கும் விழுப்புரம் - நாகை விரைவு சாலைக்கும் இணைப்பு பாலமாக அமைந்து இருந்தது.

    ஆனால் எம்.புதூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிய வருகிறது. இந்த இடம் 10 கீ மீ . தூரம் உள்ளதால் பொருத்தமற்ற இடமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தை முன்பு திட்டமிட்ட படி கலெக்டர் அலுவலகம் அருகே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகையால் தனிக்கவனம் செலுத்தி, கடலூர் பொதுமக்களுக்காக உரிய ஆய்வு செய்து, புதிய பேருந்து நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    ×