search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut tree"

    • யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

    திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.

    காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,

    காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

    சீர்காழி:

    தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
    • கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

    தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

    தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.

    இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.

    தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.

    இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி தனிமைப்படுத்த வேண்டும்.

    உடன்குடி:

    தென்னை பயிரை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிர மணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் வாடல் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.

    அதைத் தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து அது மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி தண்டின் அடிப்பகுதியும் அழுகி விடும். மரப்பட்டை எளிதில் உடையக் கூடியதாக மாறி அடிக்கடி செதில்களாக உறிந்து திறந்த வெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.

    மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து சிதைந்து துர்நாற்றம் வீசும் தண்டின் அடிப்பகுதியில் அரைத்திட்டு காளான் வித்து தோன்றும் கடைசியில் மரம் மடிந்து விடும். இதனை கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.

    நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பையில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் உடனிருந்தார். மேலும் தவல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி ஆலோசனைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த தண்டப்பந் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 65), இளநீர் வியாபாரி. இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்து விட்டார்.

    கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரைமீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தகர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • கருந்தலைப்புழு அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பழங்கரையில் வேளாண்மை துறை மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

    அவிநாசி வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு பேசுகையில், கருந்தலைப்புழு, அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3,4 ஓலைகளை தவிர மற்ற அனைத்து ஓலைகளும் காய்ந்து விடுகிறது. ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் உண்கின்றன. அதிகமாக நோய் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்தது போல் காட்சியளிக்கும் என்றார்.

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும்.
    • மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும்.

    மடத்துக்குளம்,

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் 62 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.கருந்தலை புழு, அனைத்து வயது தென்னை மரத்தையும் தாக்கக்கூடியது. இப்புழு ஆயிரக்கணக்கில் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கி, இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள், தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல் காணப்படும்.

    கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும்.மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டருக்கு 3 ஆயிரம் என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னந்தோப்புகளில் விட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு, டைக்குளோர்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05 சதவீதம் (1 மி.லி.,) இதில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.இதனைக் கட்டுப்படுத்த வேர் வழியாக பூச்சி மருந்து செலுத்தலாம். பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்திற்கு காய்களையோ, இளநீரையோ உபயோகப்படுத்தக்கூடாது.

    மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 36 சதவீதம், எஸ்.எல்., என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10 மி.லி., உடன் 10 மி.லி., தண்ணீர் கலந்து வேர் வழியாக செலுத்த வேண்டும்.மேலும் ஆலோசனைகளுக்கு, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் 89407 03385 மற்றும் அருகிலுள்ள உள்ள வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஒட்டுண்ணிகள், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலிதொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் வடக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது46), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவரது சித்தி மகள் ஜெயந்தி (40) இவர் புதுவையை அடுத்த வில்லியனூர் காவேரி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஆரியப்பாளையத்தில் உள்ளது. ஏழுமலை அடிக்கடி ஜெயந்தி வீட்டுக்கு வருவது வழக்கம்.

    அப்போது அவர் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொடுத்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி வீட்டுக்கு ஏழுமலை வந்தார். நேற்று மாலை அவர் ஆரியப்பாளையத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சட்டக்கல்லூரி மாணவர் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் விக்கிரவாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் உதயகுமார் (வயது 19).இவர் புதுவையில் உள்ள அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை உதயகுமார் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மாங்குப்பம் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி உதயகுமார் தேங்காய் பறிக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து, உதயகுமாரின் பெற்றோருக்கும், விக்கிரவாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அங்கு விரைந்து வந்த போலீசார் உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண் டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருபுவனையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து இறந்து போனார்.

    திருபுவனை:

    திருபுவனை தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துக்குமார் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போன முத்துக்குமாருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகிறது. முத்துக்குமாருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×