search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து பலி
    X

    திருபுவனையில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து பலி

    திருபுவனையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து இறந்து போனார்.

    திருபுவனை:

    திருபுவனை தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துக்குமார் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போன முத்துக்குமாருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகிறது. முத்துக்குமாருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×