search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி, திருச்செந்தூர் வட்டாரத்தில் தென்னைமரத்தில் வாடல் நோயை  கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண்மை துறை அதிகாரி விளக்கம்
    X

    உடன்குடி, திருச்செந்தூர் வட்டாரத்தில் தென்னைமரத்தில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண்மை துறை அதிகாரி விளக்கம்

    • உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி தனிமைப்படுத்த வேண்டும்.

    உடன்குடி:

    தென்னை பயிரை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிர மணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் வாடல் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.

    அதைத் தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து அது மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி தண்டின் அடிப்பகுதியும் அழுகி விடும். மரப்பட்டை எளிதில் உடையக் கூடியதாக மாறி அடிக்கடி செதில்களாக உறிந்து திறந்த வெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.

    மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து சிதைந்து துர்நாற்றம் வீசும் தண்டின் அடிப்பகுதியில் அரைத்திட்டு காளான் வித்து தோன்றும் கடைசியில் மரம் மடிந்து விடும். இதனை கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.

    நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பையில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் உடனிருந்தார். மேலும் தவல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி ஆலோசனைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×