search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து வியாபாரி சாவு
    X

    தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து வியாபாரி சாவு

    • இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த தண்டப்பந் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 65), இளநீர் வியாபாரி. இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்து விட்டார்.

    கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரைமீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தகர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×