search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut saplings"

    • கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
    • மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் சிவலூரில் நடைபெற்றது. செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்று பேசுகையில், மரங்களை வளர்ப்பது மனிதனின் பொறுப்பு, ஒவ்வொரு மனிதனும் ஒரு மரம் வளர்க்க வேண்டும், மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும் என்றார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளை அவர் வழங்கினார்.

    கூட்டத்தில் செட்டியாபத்து ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், சிவலூர் ஊர்தலைவர் முருகன், வேளாண்மைத்துறை அலுவலர் அஜித்குமார், பற்றாளர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வரவு செலவினங்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.

    • மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
    • சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த தளியில் உள்ள தென்னை மகத்துவ மையமானது விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து வினிேயாகம் செய்தல், பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்தல், விஞ்ஞான ரீதியாக தென்னை சாகுபடி முறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தல் மற்–றும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 23 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் ஆயிரத்து 300 மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ.80-க்கும், குட்டை ரக கன்றின் விலை ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 04252-265430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அலுவலக வேலை நாட்களில் தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்லலாம். தென்னங்கன்றுகள் வாங்கிச் செல்லும் போதே பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தது 0.1 ஹெக்டர் முதல் அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் வரை அதாவது 15 கன்றுகள் முதல் 700 தென்னங்கன்று வரை ஒரு விவசாயி பெற்று பயன் அடையலாம்.

    ஒரு ஹெக்டேர் குட்டை ரக கன்றுகளுக்கு ரூ.7ஆயிரத்து 500-ம் நெட்டை ரக கன்றுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம் இரண்டு தவணைகளாக பிரித்து விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் மானிய விலையில் தென்னங்கன்றுகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ஜி.ரகோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டாரம் மணலூர் கிராம பஞ்சாயத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ராமர் தலைமை தாங்கினார். மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    இதில் வேளாண்மை அலுவலர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் வைத்திலிங்கம் வாசுதேவநல்லூர் எஸ் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் முத்துலட்சுமி, சவுமியா, வர்ஷா தேவி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 33 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், பனை விதைகள் வழங்கப்பட்டது.
    • மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது மாப்பிள்ளையூரணி ஆகும். இந்த ஊராட்சி பகுதியில் விவசாய மற்றும் வேளாண்மை சார்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் குடியிருக்கும் பயனாளிகள் ஒரு நபருக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 33 பேருக்கும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 2 ஆயிரம் பனை விதைகள் வழங்கும் திட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
    • கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று தென்னங் கன்றுகள் வீதம் 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி அலுவலர் தீப்சீலா தலைமை வகித்தார்.கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார் .விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசு,ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வார்டு மெம்பர்கள், மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ×