search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்து கூலிதொழிலாளி பலி
    X

    வில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்து கூலிதொழிலாளி பலி

    வில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலிதொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் வடக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது46), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவரது சித்தி மகள் ஜெயந்தி (40) இவர் புதுவையை அடுத்த வில்லியனூர் காவேரி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஆரியப்பாளையத்தில் உள்ளது. ஏழுமலை அடிக்கடி ஜெயந்தி வீட்டுக்கு வருவது வழக்கம்.

    அப்போது அவர் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொடுத்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி வீட்டுக்கு ஏழுமலை வந்தார். நேற்று மாலை அவர் ஆரியப்பாளையத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×