என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CM Edappadi Palaniswami"
அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்குகிறார்.
இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.
இதேபோன்று, 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது.
தற்போது சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், சென்னை, குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இட வசதியின்றி செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசினால் 664 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், பாதாள கழிவுநீரகற்று திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், அம்ருத் திட்டப்பணிகள், எழில்மிகு நகரமைப்பு பணிகள், சாலை திட்டப்பணிகள், மழைநீர் கால்வாய் அமைத்தல், நவீன தகன எரிவாயு மேடைகள் அமைத்தல், இறைச்சி கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்ய முறைப்படி காலவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இவற்றிற்கான ஆய்வு கூட்டரங்க வசதிகள் இல்லாத காரணத்தினால், பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று இக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் அனைத்து வசதிகளுடன் தனித்து இயங்கக்கூடிய வகையில் வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 11 தளங்களுடன், 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் சராசரியாக 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அனைத்து தளங்களுக்கும் மைய அணுகுமுறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் இருக்கை வசதியுடன் கூடிய உணவகம், தரை மற்றும் முதல் தளத்தில் 252 இருக்கை வசதி கொண்ட உயர் கூரையுடன் கூடிய கருத்தரங்க கூடம், ஆறாம் தளத்தில் 1015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆய்வு கூட்ட அரங்கு, காணொளி கூட்ட அரங்கு, பயிற்சி அரங்குகள், ஊழியர்கள் உணவு அருந்துமிடம் மற்றும் கருத்து கலந்தாய்வு அரங்கு, ஏழாம் மற்றும் எட்டாம் தளங்களில் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகமும், ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் தளங்களில் நகராட்சி நிர்வாக அலுவலகமும் செயல்படும்.
மேலும், அதிவேக வசதியுடன் கூடிய மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களுக்கும் கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய அனைத்து வசதிகளுடன் இவ்வலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக அலுவலகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போதுமான இடவசதியுடன் அலுவலகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான உள்ளாட்சி சார்ந்த சேவைகளை சிறப்புடன் ஆற்றிட இயலும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வரைவு அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami
விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.
இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது. #Kallakurichi #EdappadiPalaniswami
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MLAKarunas #EdappadiPalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.
இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami
சென்னை:
தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் தமிழக சட்ட சபையில் 5.6.2018 அன்று 110-வது விதியின் கீழ் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் 1.1.2019 முதல் தமிழகத்தில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதை பின்பற்றி 25.6.2018 அன்று அரசாணை எண். 84 மூலம், தமிழக அரசு தடை செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் என்று ஒரு தெளிவில்லாத அரசாணை வெளியிட்டது. அந்த அசாரணையில் ஒரு விஷயம் தெளிவாக புலப்பட்டது.
அதாவது சுற்றுச்சூழலை காப்பாற்ற இந்த தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, கறு பிளாஸ்டிக் தொழில் முன்வோர்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்படுகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு முதலாளிகளும் தயாரிக்கும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதுவும் தடை கிடையாத என்ற விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்தது.
தமிழக அரசின் இந்த தடையால் பதிவு பெற்ற சிறு, குறு நிறுவனங்கள் 10 ஆயிரமும், பதிவு பெறாத சிறு, குறு நிறுவனங்கள் 15 ஆயிரமும் பாதிக்கப்டும். இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்.
பிளாஸ்டிக் தடைஇல்லாத ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் இதர மாநிலங்களுக்கு தமிழக பிளாஸ்டிக் சந்தை முழுவதுமாக திறந்து விடப்படும்.
தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் மற்றும் தமிழ்நாடு, மின்சார வாரியத்துக்கும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தமிழக அரசின் நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்.
பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள், பல நிதி நிறுவனங்களில் சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கி உள்ள கடன்களை எப்படி திருப்பி செலுத்துவது, அவர்களின் வாழ்வாதாரம் என்னாவது? தடை அமுலானால் கடன் பெற்று வாங்கிய எந்திரங்களை பழைய இரும்பு விலைக்கு தான் விற்பனை செய்ய முடியும்.
அந்நிலையில் கடன் வாங்கியவர்கள் கடனை அடைக்க வழி தெரியாமல் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், அவரை நம்பி உள்ள தொழிலாளர்களும், சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகி விடுவார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்சினையை தீர்க்க, பிளாஸ்டிக்கையே தடை செய்வது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை எரிப்பதற்கு சமமாகும்.
மேலும் இந்த தடையால் எங்கள் தொழில் எவ்வாறு பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தெழில் சங்க தலைவர் அன்புராஜனும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
நாளை தமிழகம் மற்றும் பாண்டியில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் கதவு அடைப்பு செய்து விட்டு பிளாஸ்டிக் தொழிலை நடத்தி வரும் சிறு, குறு தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
மத்திய அரசு பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமாக ஒரு இறுதி கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் வரை தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முதல்-அமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalaniswami
தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில் பட்டி, திட்டங்குளம் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி கோவில்பட்டி எட்டையாபுரம் விளாத்திக்குளம் வேம்பார் சாலைப் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நாங்குநேரி பரதர் உவரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி; சீதைக்குறிச்சி வாள்வீச்சு ரஸ்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; கடலூர் சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; சென்னை திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், நெடுஞ்சாலைத் துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 4 வகுப்பறைக் கட்டடம், கலை மற்றும் ஓவிய அறை, கணினி அறை மற்றும் நூலக அறை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 54 கோடியே 61 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 வகுப்பறைக் கட்டடங்கள், 33 ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;
கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 57 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 86 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 142 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 62 உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட 62 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டனர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், 3 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவாடானையில் கட்டப்பட்டுள்ள கிடங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மதுரை மற்றும் விருதுநகரில் கட்டப்பட்டுள்ள 2 வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, இந்த ஆண்டு 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்பிரிசியேஷன் பவுன்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தமிழ்பிராமி எழுத்தில் அணியமாக்கப்பட்டுள்ள ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நூலினையும் வெளியிட்டார். #TNCM #Edappadipalaniswami
பத்திர பதிவுத்துறையில் அலுவலகத்திற்குச் சென்று வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் பெறும் வசதி உள்ளது.
தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான “ஸ்டார் 2.0” திட்டத்தின் கீழ், பதிவுத் துறையில் வீட்டிலிருந்த படியே இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை இணைய தளம் வழியாகவே செலுத்தி விரைவுக் குறியீடு வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலை தரவிறக்கம் செய்து கொள்ளும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் விரைவுக் குறியீட்டை ஒளிவருடல் செய்தால் சான்றிதழின் நகலினை மையக் கணினியிலிருந்து பார்வையிடலாம். இம்முறையில் சான்றிதழின் உண்மைத் தன்மையை எவரும் அறிந்து கொள்ளலாம். இந்த சான்றிதழ்கள், பதிவு விதிகள் படி வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரமும் பெற்றுள்ளது.
இந்த புதிய வசதியால், பொதுமக்கள் வில்லங்கச் சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள பதிவுத்துறைக்கான கட்டணங்களை 11 வங்கிகளின் இணையவழி மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனை முறைகளிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய இணையவழி கட்டணம் செலுத்தும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இப்புதிய முறையினால் 58 வங்கிகளின் வழியே இணைய வங்கி சேவை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ஒருங்கிணைந்த கட்டண முகப்பு ஆகிய அனைத்து வழிகளிலும் பதிவுத்துறைக்கான கட்டணத்தை பொது மக்கள் செலுத்தலாம்.
பதிவுப் பணிகள் நிறைவடைந்து ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் புதிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய வசதியினால் பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்றுச் செல்ல தாமதமாகும் தருணங்களில் ஒளிவருடல் செய்யப்பட்டு தங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஆவண பிம்பங்களை தங்களின் உடனடி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், சீட்டுப் பதிவு மற்றும் சங்கப் பதிவுக்கான மென்பொருள் மேம்படுத்தப்பட்டு ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மை நிறுவனப் பதிவுக்கு புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து நகல்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற சீட்டுக்கள், சங்கங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்து திருமணப் பதிவு சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், தனி திருமணப் பதிவுச் சட்டம், கிறிஸ்துவ திருமணப் பதிவுச் சட்டம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென் பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து சான்றிதழ்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற திருமணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 12 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம் மற்றும் மின்) பணியிடங்களுக்கு பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 உதவிப் பொறியாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 6 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்குகள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேளுக்குறிச்சி கிளை அலுவலகக் கட்டடம் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் சீர்காழி கிளை அலுவலகக் கட்டடம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உரக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்