search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமண்டபம்"

    • ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    சென்னை:

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக உருவெடுத்தார்.

    "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் , திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தது, "குட்டி தொல்காப்பியம்" என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமா முனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    புதிதாக நிறுவப்படவுள்ள 3 சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் திருவுருவச்சிலை, சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவச் சிலை, அண்ணல் காந்தியடிகள் மற்றும் தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அரங்கம் என மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தித்துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

    நாகர்கோவில், நவ.14-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.விற்குட் பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நாகர் கோவிலில் நடைபெற்றது. அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன் னாள் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. விற்குட்பட்ட கன்னியா குமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை ஏற்கனவே கூறியபடி விரைவாக அமைத்து, பூத் கமிட்டி புத்த கத்தினை வருகிற 18-ந்தேதிக் குள் கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பது, குமரி மாவட்ட பத்திரப்பதிவில் நிலத்திற்குரியவர்கள் 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொது மக்களை யும் திரட்டி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது.

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணி களை விரைவில் முடிப்பதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பச்சைமால், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாணவரணி செயலாளர் மனோகரன், குமரி மாவட்ட இளைஞரணி, இளம்பெண் பாசறை செய லாளர் அக் ஷயாகண்ணன், பகுதி செயலா ளர்கள் ஜெயகோபால், ஜெபின் விசு, ஸ்ரீலிஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக் குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரபீக், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் பிரிவு செயலாளர் ஆறுமுகராஜா, நிர்வாகி பசலியான் நசரேத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பகுதி செயலாளர் முருகேஸ்வரன் நன்றி கூறினார்.

    • தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜசோழன் 1038-வது சதய விழா நடந்தது.
    • காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ் தேசிய பேரியக்கம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது உடையா ளூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, பழ. ராஜேந்திரன், சீனிவாசன், தனசேகரன், பாலன், தீன் தமிழன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி கரிகாலன், வெள்ளா பெரம்பூர் ரமேஷ், செந்தில் வேலன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைய வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்ட பம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இமானுவேல் சேகரனாருக்கு அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில் மணிமண்டபம் அமையவுள்ள இடம் பார்வையிடப் பட்டுள்ளது.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குரிய அனுமதியினை பெற்று விரைவில் பணிகள் நடை பெறும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    பின்னர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபு ரம் தி.மு.க மாவட்ட செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வ ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் கலெக்டர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர சபை தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜய குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், தி.மு.க. விவசாய அணி மாநில துணைச் செயலாளரும்,

    முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருக வேல் மற்றும் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா ராணி,தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
    • நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

    அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் விடுதலைக்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். இவரின் பிறந்த நாளான ஜூலை 7 -ந் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இரட்டைமலை சீனிவாசனுக்கு அவர் பிறந்த மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    தற்போது மணி மண்டப கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் அங்கிருந்த கழிவறையை மர்ம நபர்கள் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் திறக்கப்படாமல் உள்ளதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறத்தொடங்கி இருக்கிறது.

    எனவே இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டை மலை சீனிவாசனுக்கு எங்கள் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மணி மண்டபம் பணிகள் முடிந்து அதனை திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு மேல் மணிமண்டபம் புதர் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது. மணிமண்டபத்தை சுற்றியுள்ள முட்பதர்களை அகற்றி இயற்கையான சுற்றுச்சூழலில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபத்திற்கு அரசு அறிவிப்புக்கு முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பளித்தார்.
    • ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் நேற்று பர மக்குடியில் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பி.பி.எப்.டி. அமைப்பின் நிறுவன தலை வரும், முன்னாள் கவுன்சில ருமான பொன்னையாபுரம் மனோகரன் தனது ஆதரவா ளர்களுடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். அவ ருக்கு எங்கள் அமைப் பின் சார்பில் நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம்.இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல் இது நீண்ட போராட் டமாக இருந்தது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் எங்கள் அமைப்பின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.

    நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் அண்டக்குடி முருகே சன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதக்காதி, மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி, தனுஷ் பிரபாகரன், மதி இளமாறன், ராமநாத பிரபு, சரோன் இளமாறன் உள்ளிட்ட பி.பி.எப்.டி. அமைப்பின் நிர் வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு எஸ்.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

    தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியனுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீப் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது எஸ்.ஆர். பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில்:-

    தேவேந்திரகுல வேளா ளர் மக்களின் நீண்ட கோரிக் கையான தியாகி இமானு வேல் சேகரனார் அவர் களுக்கு தமிழக அரசு சார் பில் 3 கோடி செலவில் முழுஉருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக் கப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலை வர் அருண்குமார், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன் தெற்கு மண்டல செயலாளர் மங்கள ராஜ், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்டதுரை பழனி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருத குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனிவேல் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாழ மணி பாண்டியன், தென் காசி மாவட்ட செயலாளர் யோகராஜ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரவின் ராஜ், நெல்லை மாவட்ட செயலா ளர் ராஜேஸ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலா ளர் கருப்பசாமி பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
    • வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.

    அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாள் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். சரவணன் தலைமையில் தியாகராய நகரில் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி ம.பொ.சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் டாக்டர் கே.வி.எஸ்.சரவணன் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரரும் தமிழறிஞருமான சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பனைத்தொழில் பாதிப்படையும் வகையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம்.பி.மணி, அன்பழகன், உதயா, ஜெயசங்கர், உதய சங்கர், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.
    • தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்க போராடிய விவசாயிகள் மீது அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகள் மீதான திமுக.,வினா் பாா்வை தற்போது வரையில் மாறவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.

    பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் இங்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்பட வேண்டும்.பிரதமா் மோடி அரசாங்கம் இலவச மின்சாரத்துக்கும், விவசாயிகளுக்கும் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதை பாஜக., ஆதரிக்கும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை பிரதமா் மோடியையே சாரும் என்றாா்.இதைத் தொடா்ந்து, தியாகிகள் நினைவிடத்தில் ஒலிபெருக்கி வைக்க காவல் துறையினா் அனுமதி வழங்காததைக் கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

    • செய்தி துறை செயலாளர் தகவல்
    • மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மண்டப உள் அரங்கினை ஆரோக்கியமான பயன்பாடுகளுக்கு கொண்டுவர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து, பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்ட பத்தினை ஆய்வு மேற் கொண்டு மண்டபத்தில் பழுத டைந்துள்ள பகுதிகள் புதிதாக சீரமைக்கப்பட்டதை பார்வையிட்டு, மண்டபத்தில் உள்புறம் பொதுவுடமை வீரர் ப.ஜீவா னந்தத்தின் அரியவகை புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்திட அறிவுறுத்தினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபத்தினை ஆய்வு மேற்கொண்டு, மண்டபத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதை சீரமைத்திட பொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும், தோவாளை பகுதியில் ரூ.92.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் விரைவில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

    ஆய்வுகளில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின் பிரபு, வட்டாட்சி யர்கள் ராஜேஷ், வினை தீர்த்தான், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×