search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closed"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது. பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஊட்டி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்தின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு நுழைவுவாயிலில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.



    ஊட்டி படகு இல்லத்தில் வார விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், நேற்று படகு இல்லத்தின் உள்பகுதியில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி ரத்து செய்யப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டதால், அங்கு கார்களில் வந்த சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. சில சுற்றுலா பயணிகள் மட்டும் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி பூங்காவில் வலம் வந்தனர்.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தருவார்கள். இதனால் ஊட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். ஆனால், நேற்று வாகன போக்குவரத்து இன்றி சேரிங்கிராஸ் பகுதி வெறிச்சோடியது.

    அதேபோல் ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. கமர்சியல் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. 
    சிவகங்கையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28-ந்தேதி நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் நகரின் மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர்.

    மேலும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில், சங்க தலைவர் அறிவுதிலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கந்தசாமி, மதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பைசல், அ.ம.மு.க. நகர செயலாளர் அன்புமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், தி.மு.க. சார்பில் அயூப்கான், ஜெயகாந்தன், வர்த்தகர் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் சுகர்னொ, துணைத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன், த.மா.கா. நகரச் செயலாளர் செல்வரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் வெள்ளையப்பன் நன்றி கூறினார்.
    27-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்படுகின்றன.
    வருகிற 27-ந்தேதி இரவு 11.54 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது, அரிய சந்திர கிரகணம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக, கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்துக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும்.

    அதேபோல் வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன. பின்னர் மறுநாள் 28-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவிலின் கதவுகள் திறந்து தண்ணீரால் சுத்தப்படுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து புண்யாவசனம் செய்தபின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் ஆகியவை 27-ந்தேதி மாலை 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து கோவில் வளாகம் அனைத்தும் சுத்தம் செய்த பின் காலை 8 மணிக்குமேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    சந்திரகிரியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் 27-ந்தேதி மாலை 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில் 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சீனிவாசமங்காபுரம், அப்பலாயகுண்டா கோவில்கள் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiTemple #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக் குளத்தில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன் பழைய நீர் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா சம்ப்ரோ‌ஷணம, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரம்மோற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

    எனவே இம்மாதம் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்ரீவாரி தெப்பக்குளம் வரும் 10-ந்தேதி மூடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு அதிலுள்ள பழைய நீர் அகற்றப்படும்.

    தொடர்ந்து படிகளை கழுவி குழாய்களை சுத்தம் செய்து செப்பனிடும் பணிகள் நடைபெறும். நீர் சுத்திகரிக்கும் மையம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் பின் குளத்தில் புதிய நீர் நிரப்பி ஆகஸ்ட் 9-ந்தேதி தெப்பக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

    குளத்தில் எப்போதும் பி.எச்.வேல்யூ 7 என்ற தரத்தில் தண்ணீர் இருக்குமாறு ஊழியர்கள் அடிக்கடி சோதனை செய்து வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple #Tirupati
    ஊட்டி அருகே பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அங்கு பூங்கா மற்றும் காட்சி முனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி நகரை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டியை சுற்றி பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வெட்ட வெளியாக காட்சி அளித்தது. அந்த இடங்களை அழகுப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில், வெளிநாட்டில் இருந்து பைன் மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதி மற்றும் சோலூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பைன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

    ஊட்டி தலைகுந்தா அருகே பைன்பாரஸ்ட் (பைன் மரக்காடுகள்) சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இங்கு ஒரு நபருக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைன் மரக்காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சரிவுகளில் உயரமாக வளர்ந்து உள்ள பைன் மரங்களை கண்டு ரசிப்பதுடன், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். அங்கு கீழே விழுந்த மரங்கள் இருக்கைகளாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இருக்கைகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கண்டு களிக்கின்றனர். மேலும் பைன் மரக்காடுகளின் கீழ்பகுதியில் காமராஜ் சாகர் அணையில் எழில்மிகு தோற்றம், இயற்கை அழகை காணலாம்.

    ஊட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. அப்போது பைன் மரக்காடுகளில் கீழே நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் மழையின் போது சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நிற்க போதுமான வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், பைன் மரக்காடுகளில் சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாட்டு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பைன்பாரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன்பாரஸ்ட் மூடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வருகின்றனர். வார விடுமுறை, சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைபாதையுடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் முன்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. கீழ்பகுதியில் பல்வேறு மலர் செடிகளை கொண்டு பூங்கா அமைத்து, சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் காட்சி முனை அமைக்கப்பட உள்ளது. அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பைன் பாரஸ்ட் மீண்டும் திறக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். 
    பெண்கள் போராட்டம் எதிரொலியால் காஞ்சீபுரத்தில் மதுக்கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களும், பொதுமக்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் அளித்தனர். மேலும் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையினை அகற்ற மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பினால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கலெக்டர் பொன்னையாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது. இதனால் சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு முன்பெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் வீண் அலைச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அலுவலர்கள் இல்லை என்றால் அலுவலகத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் நேரம் வீணானது.

    இவற்றை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு சங்க அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல்துறை, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர், பூதலூர் ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க அலுவலகங்களில் 274 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே பெற்று கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கும், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கும் இந்த மையங்கள் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம். இவைகள் அனைத்தும் இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்வது, அவற்றின் மீதான நடவடிக்கை ஆகியவற்றை குறுந்தகவல் மூலமாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சான்றிதழ் தயாரான தகவல் பெறப்பட்டதும், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இ-சேவை மையங்கள் வழியாக சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை வந்தபிறகு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்கள் மூலம் சான்றிதழ் பெறுவது மிக எளிதாகவே இருந்தது. இதனால் இ-சேவை மையங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் தற்போது பள்ளிக்கூடம் திறந்துவிட்டதால் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்காக வழக்கத்தை காட்டியிலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களாக இ-சேவை மையங்களில் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் முடியவில்லை. சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு வழங்கவும் முடியவில்லை.

    தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்ட இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காததால் நேற்று மையத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டனர். இதனால் சான்றிதழ் பெறுவதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

    தொடக்கத்தில் இ-சேவை மையங்களில் சாதி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சில சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தற்போது 30-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இ-சேவை மையங்களின் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை.

    வழக்கமாக 50 விண்ணப்பங்கள் வரை பதிவேற்றம் செய்த நிலையில் நேற்றுமுன்தினம் 5 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. இதனால் மையங்களுக்கு சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள், மாணவர்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம். இன்றைக்கு(நேற்று) மையத்தையே பூட்டிவிட்டனர். சர்வர் இணைப்பு கிடைக்காத பிரச்சினை 5 நாட்களாக நீடித்து வருகிறது. ஆனால் அவற்றை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தினமும் எந்த வேலைக்கும் செல்லாமல் மையத்திற்கு அலைவது தான் வேலையாக உள்ளது. வீண் அலைச்சலை போக்குவதற்கு தான் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. இப்போது இங்கேயும் சான்றிதழ் பெற அலைய வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனே சர்வர் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, சர்வர் இணைப்பு கிடைக்காததால் 5 நாட்களாக பெரும் பிரச்சினையாக தான் உள்ளது. காலையில் 9 மணி அளவில் இணைப்பு கிடைக்கிறது. 10 மணிக்கு மேல் இணைப்பு கிடைப்பது இல்லை. பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு திரும்பி செல்லும் சம்பவம் நடக்கிறது. நேற்று பல இடங்களில் சர்வர் இணைப்பு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. நாளைக்குள்(திங்கட்கிழமை) இந்த பிரச்சினை தீரும் என்றனர். 
    திருவண்ணாமலையில் பெண்கள் எதிர்ப்பால் மீண்டும் திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தேனிமலையில் அரசு பஸ் டெப்போ அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது.

    இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் நேற்று அதிகாரிகள் வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதிபெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

    பெண்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இதனையடுத்து புதியதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.




    மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தின் போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பொதுச் செயலாளர் தண்டபாணி, தென் மண்டல அமைப்பு செயலாளர் சந்திர சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. #GovernmentSchool
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

    இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

    அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, 4 நகராட்சி தொடக்கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ-மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

    பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

    அப்படியே அந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×