என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chief Justice"
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.
முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.
மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர்நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 26-ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்க வேண்டிய இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
விஜயவாடா நகரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நீதிபதி பிரவீன் குமாருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.
இதற்கிடையே, அமராவதி நகரில் இன்னும் சரியாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர மாநில வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நேற்று நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்துள்ளது. #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar
அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:-
அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும் திகழ்கிறது. சிக்கலான, நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்பது நமக்கு நல்லது. இல்லாவிட்டால், நமது கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும்.
நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வெறுமனே கொண்டாடாமல், வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், 59 நீதிபதிகள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வரும் பி.புகழேந்தியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு வயது 51. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமாத்தூர் ஆகும். தற்போது, மதுரை நாராயணபுரம் விஸ்வசாந்தி நகரில் வசித்து வருகிறார்.
இவரது தந்தை பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருவாய்துறையில் பணியாற்றி தாசில்தாராக பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்று விட்டார்.
இதன் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை விருத்தாசலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகழேந்தி படித்தார். இவரது தாயார் பெயர் வேலம்மாள். மனைவி பெயர் ஜெயபாரதி. இவர், மதுரையில் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
புகழேந்தி, 1990-ம் ஆண்டு புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டில் வக்கீலாக பதிவு செய்த அவர், 1993-ம் ஆண்டு வரை கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனது சித்தப்பா பரமசிவத்திடம் ஜூனியராக இருந்தார்.
அதன்பின்னர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற ராஜேஸ்வரனிடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்றினார்.
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி ஆகியவற்றின் வக்கீலாக பணியாற்றி உள்ளார். மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க (எம்.பி.எச்.ஏ.ஏ.) செயலாளராக இருந்துள்ளார். பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகளிலும், ரிட் மற்றும் வங்கி தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி உள்ளார்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிறப்பு அரசு வக்கீலாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தமிழக அரசுக்காக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார். 2.8.2016 முதல் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.
இவர் விரைவில் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. #Pugalendhi #ChennaiHighCourt #ChiefJustice
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஜனாதிபதி கடந்த 3-ந் தேதி, நீதிபதி ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்தார். ரஞ்சன் கோகாய், வருகிற 3-ந் தேதி பதவி ஏற்கிறார்.
கடந்த ஜனவரி 12-ந் தேதி, நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் நீதிபதி ரஞ்சன் கோகாயும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாகவும், சுப்ரீம் கோர்ட்டில் நிலவிய உட்பூசல்கள் குறித்து பொதுமக்களின் கோபத்தை தட்டி எழுப்ப முயன்றதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல், சட்ட விரோதமானது, உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது என்றும், அவரது நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி நியமனத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், ரஞ்சன் கோகாய்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. #CJI #JusticeRanjanGogoi
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேனீர் விருந்து நடைபெற்றது.
தேனீர் விருந்துக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
விழாவில் கலந்து கொள்ள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. அப்படி இருந்தும் தலைமை நீதிபதி வி.கே.தஹிலா ரமானியை தவிர்த்து ஐகோர்ட்டு நீதிபதிகள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. முன் வரிசையில் மட்டும் ஒருசில ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமர்ந்து இருந்தனர்.
கடந்த 12-ந்தேதி கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு பின்னால் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் குறை கூறப்பட்டது.
இதன் காரணமாகவே கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுதந்திர தின விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஐகோர்ட்டில் நேற்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைமை நீதிபதி இந்த தகவலை நீதிபதிகளிடம் தெரிவித்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
மேலும் மரபு மீறல் தொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதை நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.
இதை கேட்டு பெரும்பாலான நீதிபதிகள் திருப்தி அடைந்தனர். ஆனாலும் அவர்கள் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-
அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ‘இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று அறிவித்தார். #HighCourt #TrafficRamasamy
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். #KamleshTahilRamani
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, அயனாவரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அதேபோல, திருவண்ணாமலையில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை 8 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அண்மை காலங்களில், தமிழகத்தில் அதிகம் நடக்கின்றன.
எனவே, பெண்களுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று வக்கீல் சூரிய பிரகாஷம் கோரிக்கை விடுத்தார்.
இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. தாமாக முன்வந்து வழக்கு எல்லாம் பதிவு செய்ய முடியாது. சிறுமி தொடர்பான வழக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் போலீசார் விரைவாக விசாரிப்பார்கள். கோர்ட்டும் விரைவாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்கும் என்று கருத்து கூறினர்.
இதையடுத்து பாடம் நாராயணன் என்பவர் எழுந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பாலியல் கொடுமைக்கு உள்ளான சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கவேண்டும். ஆனால், போலீசார் இந்த கமிட்டியிடம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை இதுவரை ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.
இதே கருத்தை வலியுறுத்தி, குழந்தைகள் நல கமிட்டியின் வக்கீல் மெக்ரூனிஷாவும் வாதம் செய்தார். பின்னர், பல மாவட்டங்களில், குழந்தைகள் நல கமிட்டி அமைக்கப்படாமலும், அதிகாரிகள் நியமிக்கப்படாமலும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஏற்கனவே, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நல கமிட்டிக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இப்போது மீண்டும் அதே உத்தரவை பிறப்பிக்கின்றோம். 11 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி, ‘11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைதான 17 பேர் நேற்று மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை வக்கீல்கள் கொடூரமாக தாக்கினார்கள். போலீஸ் காவலில் உள்ள கைதிகளை வக்கீல்கள் தாக்கியது சட்டப்படி குற்றம்’ என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள் எந்த பதிலும் சொல்லவில்லை. #chennaigirlharassment #chennaihighcourt
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறிய பல குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏழுமலையானின் நகைகள் மாயம், ஆகம சாஸ்திரங்களுக்கு எதிராக அதிகாரிகளின் நடவடிக்கைகள், மடப்பள்ளியில் சுரங்கம். உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ரமண தீட்சிதர் கிளப்பி உள்ளார். இதனை தேவஸ்தானம் மறுத்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐதராபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சில நகைகள் களவு போனதாகவும், காணாமல் போனதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அறங்காவலர் குழு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் நகைகளை ஆய்வு செய்து, அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த விவகாரம் குறித்து ஐதராபாத் ஐகோர்ட்டு, ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த குழுவின் அறிக்கையை பக்தர்கள், பொதுமக்களுக்கு தெரியும்படி பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பான்தனா. இவர் தனது பெயரை ரம்யா என மாற்றி படங்களில் நடித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் எம்.பி. பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவராக பதவி வகிக்கிறார்.
இவர் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த போது தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்குகிறார் என சூசகமாக விளக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகை திவ்யா ஸ்பான்தனா தனது டுவிட்டரில் தலைமை நீதிபதிக்கு எதிராக லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்கை ஒதுக்குகிறார் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்