search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gogoi"

    • ராகுல் காந்தி நடை பயணம் அசாமில் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.
    • இவரின் ஆகாய வழி பயணத்திற்கான மட்டும் அசாம் மாநில அரசு 58 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

    இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்.பி.யான கவுரவ் கோகாய், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் விமான போக்குவரத்து செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால், மக்களவை சபாநாயகர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக கோகாய் கூறுகையில் "அசாம் மாநில முதல்வர் மற்ற முக்கிய நபர்களுடன் விமான பயணம் மேற்கொண்டதன் வகைக்காக அசாம் மாநில அரசு 58.23 கோடி ரூபாய செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் அரசு சாராத பயணமம் அடங்கும் எனச் சொல்லப்படுகிறது.

    செலவழிக்கப்பட்டது அனைத்தும் பொதுமக்கள் பணம். அது முக்கியமான வளர்ச்சி திட்டத்திற்கு அல்லது சமூக நலன் தொடர்பான திட்டத்திற்கு செலவழித்திருக்கலாம். அரசு சாரா பயணம் மேற்கொண்டது. நிதி மற்றும் பொறுப்பு தொடர்பாக முக்கிய கவலை அளிக்கிறது" என்றார்.

    அரசியல் நிகழ்ச்சிக்காகவும், அசாம் மாநிலத்திற்கு வெளியே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் வாடகை விமானத்தை பயன்படுத்தியதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    சமீபத்தில் அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடை பயணம் செல்வதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் கோகாய் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்காவிட்டால் ஆபத்து என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். #SupremeCourt #ChiefJustice #RanjanGogoi
    புதுடெல்லி:

    அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:-

    அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும் திகழ்கிறது. சிக்கலான, நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்பது நமக்கு நல்லது. இல்லாவிட்டால், நமது கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும்.

    நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வெறுமனே கொண்டாடாமல், வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×