என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து- நடிகை திவ்யா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
Byமாலை மலர்15 May 2018 6:42 AM GMT (Updated: 15 May 2018 6:42 AM GMT)
நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:
தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பான்தனா. இவர் தனது பெயரை ரம்யா என மாற்றி படங்களில் நடித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் எம்.பி. பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவராக பதவி வகிக்கிறார்.
இவர் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த போது தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்குகிறார் என சூசகமாக விளக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகை திவ்யா ஸ்பான்தனா தனது டுவிட்டரில் தலைமை நீதிபதிக்கு எதிராக லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்கை ஒதுக்குகிறார் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பான்தனா. இவர் தனது பெயரை ரம்யா என மாற்றி படங்களில் நடித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் எம்.பி. பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவராக பதவி வகிக்கிறார்.
இவர் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த போது தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்குகிறார் என சூசகமாக விளக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகை திவ்யா ஸ்பான்தனா தனது டுவிட்டரில் தலைமை நீதிபதிக்கு எதிராக லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்கை ஒதுக்குகிறார் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X