search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chembarambakkam lake"

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அடையாறு கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுஞ்செய்தியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு.
    • நேற்று 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணி முதல் 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் கொள்ளளவு 22.35 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை தாண்டி உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,112 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. 166 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் நீர்வரத்து 258 கனஅடியாக சரிந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 3300 மி.கனஅடி. இதில் 2751 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3231 மி.கனஅடி. இதில் 1867 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 120 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 81 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 434 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 8806 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதால் தொடர்ந்து கனமழை பெய்தால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
    • சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    திருவள்ளூர்:

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில்,

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும்.

    உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

    சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது.
    • தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் மழைநீர் 90 கனஅடி வருகிறது. இதன் மூலம் ஏரியின் கொள்ளளவு 1,833 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) ஆக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 95 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 104 கனஅடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 613 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. 12 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 386 கன அடி நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 2,726 மில்லியன் கன அடியாக (2.7 டி.எம்.சி.) உள்ளது.

    500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 10 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் இருப்பு 438 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி (3.6 டி.எம்.சி.) ஆகும். 153 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 132 மில்லியன் கனஅடி (3.1 டி.எம்.சி.) அதாவது 85.93 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 66 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கனஅடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது. 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி (13 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 9 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 68.52 சதவீதமாகும்.

    சென்னை மாநகருக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. வரை தேவைப்படும் நிலையில், அடுத்த 9 மாதத்துக்கு நீர் இருப்பு கைவசம் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதேநேரம் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீரை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் திறப்பு ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
    • தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8,227 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளவில் 70 சதவீதம் ஆகும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2665 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக பலத்த மழை பெய்யும்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டினால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும். கடந்த மாதம் கனமழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 108 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி ஆகும். தற்போது ஏரியில் 2,665 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரிக்கு 235 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1854 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி கனஅடியில் 439 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8667மில்லியன் கனஅடி ஆக உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் ஆகும்.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2632மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழை பெய்தால் ஏரியில் இருந்து உபரிநீர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1872 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 545 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது.

    • குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன்காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதேபோல் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

    இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு சப்ளை செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி.இதில் 2430மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081மி.கனஅடி. இதில் 498மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் 2589 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 480 மி.கனஅடி நீர் நிரம்பி காணப்படுகிறது.

    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது. ஏரியில் 3130 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது பலத்த மழை இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை ஒரு அடி குறைத்து 21 அடிக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் வைத்திருந்தால் பருவமழை தீவிரம் அடையும்போது உடனடியாக உபரி நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஏரியில் நீர் இருப்பை 21 அடியாக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏரியில் இருந்து தொடர்ந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது. பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 22 அடியை எட்டியது. ஏரியில் 3132மி.கன அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது. இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு 393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும் அவ்வப்போது பலத்த மழை பெய்வதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதலில் இன்று காலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் பலத்த மழை பெய்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பருவமழை தொடங்கு வதற்கு முன்பே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதும் எந்த பயனும் இன்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பைதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    ×