search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பருவமழை விரைவில் தொடக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை ஒரு அடி குறைக்க முடிவு
    X

    பருவமழை விரைவில் தொடக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை ஒரு அடி குறைக்க முடிவு

    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது. ஏரியில் 3130 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது பலத்த மழை இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை ஒரு அடி குறைத்து 21 அடிக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் வைத்திருந்தால் பருவமழை தீவிரம் அடையும்போது உடனடியாக உபரி நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஏரியில் நீர் இருப்பை 21 அடியாக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏரியில் இருந்து தொடர்ந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது. பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×