search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrashekar Rao"

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
    • கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது.

    இருப்பினும் இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    • கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் கடந்த 2001-ம் ஆண்டு கட்சி தொடங்கினார். தெலுங்கானா பிரிவினைக்காக பாடுபட்ட அவர், மாநில பிரிவினைக்குப்பின் தெலுங்கானாவில் ஆட்சியையும் பிடித்து உள்ளார்.

    இந்த நிலையில் தனது கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என பெயரையும் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

    பின்னர் இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ராஷ்டிர சமிதியாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன.
    • 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

    அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை' என விமர்சித்தார்.

    விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
    • எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மெகபூப்நகரில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மாநிலத்தின் மொத்த உற்பத்தி ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால், ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கும். ரூ.3 லட்சம் கோடி வருவாய் போய்விட்டது.

    இப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பது நியாயமா? நீங்களும் வேலை செய்வதில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிப்பது இல்லை. யாராவது கேள்வி கேட்டால், உங்கள் அரசை தூக்கி எறிவோம் என்கிறீர்கள்.

    பிரதமர் மோடி சொல்கிறார். ''சந்திரசேகர ராவ், உங்கள் அரசை தூக்கி எறிவேன்'' என்கிறார். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது?. உங்களைப் போல், நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா? மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சி அமைத்துள்ளோம்?.

    என்ன காரணத்துக்காக ஆட்சியை தூக்கி எறிவீர்கள்?. ஒரு பிரதமர், மேற்கு வங்காளத்துக்கு சென்று, ''உங்கள் எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்று பேச முடியுமா?. அவர் சொல்வாரா?

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த சில திருடர்கள் வந்தனர். அவர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

    யார் ஆள வேண்டும், யார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாநில அரசு, எந்த இடையூறும் இன்றி 5 ஆண்டுகள் ஆள அனுமதிக்கப்பட வேண்டும்.

    அற்ப அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் உயிர்நாடியையே பா.ஜனதா பாழாக்குகிறது. மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தெலுங்கானாவின் பங்கை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக புகார்.
    • நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

    குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.

    இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.

    இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    முன்னதாக இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் போனில் பேசியதாக பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தார்.

    இதை மறுக்கும் வகையில் கவிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவ் காருவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார்.

    எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பா.ஜனதா எம்.பி.க்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்த்து தற்போது முதல்-மந்திரியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மகளின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.

    இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது.
    • மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை.

    ஐதராபாத் :

    சுதந்திர தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:-

    மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாத மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்கிறது. அப்படி சொல்வது தவறு.

    மேலும், தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்கிறது. மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 41 சதவீத பங்கை 29.6 சதவீதமாக குறைத்துவிட்டது.

    பொது பட்டியலில் உள்ள விவகாரங்களை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
    • மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.

    ஐதராபாத் :

    மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.

    குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற 19-ந்தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
    • புதிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ அல்லது ‘நவபாரத் கட்சி’ என பெயர் வைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளது.

    ஒரு புறம் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அதே போல தெலுங்கானா முதல்-மந்திரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க புதிய கட்சியை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்சிக்கு 'பாரத் ராஷ்ட்ர சமிதி' அல்லது 'நவபாரத் கட்சி' என பெயர் வைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் பா.ஜனதா மதவாத கொள்கையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அக்கட்சியை வெல்ல அகில இந்திய அளவில் புதிய கட்சியை உருவாக்க எதிர் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் வலுவாக இருக்கும் என சந்திரசேகர ராவ் கருதுகிறார். அதன்போரில் இந்த புதிய கட்சி உருவாக உள்ளது.

    வருகிற 19-ந்தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் 19-ந்தேதிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சந்திரசேகர ராவ் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

    டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை சோனியா அழைத்துள்ள நிலையில், சந்திரசேகர ராவ் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரசுடன் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி வெளிவர உள்ளன. அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அழைத்துள்ளார்.

    இதற்காக அவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும், பா.ஜனதாவை எதிர்த்து செயல்படும் மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சோனியா அனுப்பிய கடிதம் இன்று மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு சென்று சேர்ந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கடிதம் வந்தது.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் 23-ந் தேதி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிரடியாக செயல்படுவது என்று அந்த கூட்டம் மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது.

    23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும் சோனியா கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்த 3 பேரும் 23-ந் தேதி டெல்லி கூட்டத்தில் பங்கேற்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    குறிப்பாக சந்திரசேகர ராவும், ஜெகன்மோகன் ரெட்டியும் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்ட பிறகே காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தலாம் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. அவர்களது தயக்கம் காரணமாக 23-ந் தேதி கூட்டம் முழுமையான எதிர்கட்சிகளை கொண்டதாக இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அவர்களுடன் துரைமுருகன் முன்னாள் மத்திய மந்திரி டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தார்கள்.
    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

    தேர்தலுக்கு முன்பே இது தொடர்பான முயற்சிகளில் அவர் வேகம் காட்டினார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்னர் 3-வது அணி முழுமை அடையவில்லை.


    இந்த நிலையில் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

    மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் அவர் மாலை 4.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் அனைத்து மாநிலங்களிலும் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால் மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் தனித்தே களம் இறங்கி உள்ளனர். இப்படி பல மாநிலங்களில் மாநில கட்சிகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டதாகவே குற்றச்சாட்டு உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அதற்கு ராகுல்காந்தியே முழுபொறுப்பு என்று கூறி இருந்தார். இப்படி பிரிந்து நிற்கும் மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிறகு 3-வது அணியை உருவாக்கி பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3-வது அணிக்கு வலுசேர்ப்பதற்காகவே சந்திரசேகர ராவ் காய் நகர்த்தி வருகிறார். இதற்கான முயற்சியாகவே மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் இருவரும் தங்களது சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 3-வது அணி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மேலும் பல தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். எனவே காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    இதனால் இன்றைய இருவரது சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட முயற்சித்துவரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை சந்தித்தார். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார்.
     
    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

    இந்நிலையில், நேற்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அக்கறை காட்டிவரும் சந்திரசேகர ராவை சந்திப்பதற்காக ஐதராபாத் செல்வேன் என்று உ.பி.முன்னாள் முதல் மந்தியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்திரசேர ராவ் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது, தெலுங்கானா மாநிலம் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அவர் ஆலோசித்திருப்பார் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள் குறிப்பிட்டனர். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
    ×