search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "champion"

    • தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
    • தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.

    இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் ஸ்ரீதர் சுவாமிகள் யோகா சென்டரில் பயின்ற மாணவி ஜெயவர்தினி (வயது 12), அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிக்கு எம்.எல்.ஏ., ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

    போட்டியில், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மெட்ரிக் பள்ளி சாத்தூர் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப் மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடம், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.

    தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணை செயலர் சூரியநாராயணன் வரவேற்றார். பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது
    • கையுந்து பந்து போட்டியில் 18 கல்லூரி அணிகள் கலந்துகொண்டது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கையுந்து பந்து போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தியது.இதில் திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையான கல்லூரி அணிகள் பங்கேற்றன.18 கல்லூரி அணிகள் கலந்துகொண்ட கையுந்து பந்து போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, கரூர் அரசு கல்லூரியை 25-13, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-13, 22-25, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஜமால் முகமது கல்லூரியின் செயலரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, உதவிச்செயலர் கே.அப்துஸ் சமது, கௌரவ உறுப்பினர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால் முதல்வர் முனைவர் கே.என்.முகமது பாசில் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
    • தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    காங்கயம்:

    2022-2023-ம் ஆண்டிற்கான தாராபுரம் குறுமைய அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குழு போட்டிகளில் 205 புள்ளிகள் பெற்று தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    தடகள போட்டியில் இந்த பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 1,500, 800 மீட்டர் போட்டியில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-ம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஹரிஸ் குண்டெறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், கோகுல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும், ஹெர்மன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் விங்கேஷ்வரன் வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்                சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவகுமார், ராம்கி ஆகியோரையும், பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவு முதலிடம் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வட்டார அளவில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களை பள்ளி தாளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.



    • பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 307 மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு 217 மாணவ-மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.

    வெற்றிப்பெற்ற மாணவர்களையும் சாரண-சாரணியர் அமைப்பின் நீண்டக் கால சேவைக்கான மாநில விருதினை பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து பெற்று வந்துள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் சாரண-சாரணிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    • பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது.
    • 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, அப்புவிளை மகேசுவரன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர்.

    பெண்கள் பிரிவு போட்டியை ராதாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழவந்தகணபதி, பொன் மீனாட்சி அரவிந்தன், சாந்தா மகேசுவரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் தூத்துக்குடி துரைசிங்கம் அணியை தானே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் கன்னியாகுமரி அணியை சென்னை வருமான வரித்துறை அணி வென்றது. 3-வது போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் எதிர்நீச்சல் அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்றது.

    பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது. 3-வது போட்டியில் சாய் அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் பெங்களூரு அணியை மங்களூரு அணி வென்றது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் தானே அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் டெல்லி அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் மங்களூரு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் சுழற்–கோப்பை பரிசு வழங்கினர். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய குழு துணைத்தலைவர் இளையபெருமாள், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், சாலமன் டேவிட், இசக்கிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாம்பியன் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து பெற்றனர்.
    • பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மாநில அளவிலான பாராமெடிக்கல் கல்லூரிகளுக்கு இடையே நாடகம், கவிதை, ஓவியம், தனித் திறன் மற்றும் கருத்தரங்கு, ஆய்வரங்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    இதில் தமிழகத்தில் உள்ள 12 பாரா மெடிக்கல் கல்லூரிகள் கலந்து கொண்ட வாடிப்பட்டி ஈஷா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். அவர்களை முதல்வர் சாம்சேட் தலைமையில் பேராசிரியர் முத்துப்பாண்டி, பி.ஆர்.ஓ. சீதாராமன், மாணவர் பொறுப்பாளர் ராஜா ஆகியோர் வாழ்த்தினர்.

    • தென்னாப்பிரிக்காவுடனான போட்டியை இந்திய மகளிர் அணி டிரா செய்தது.
    • இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

    லாசானே:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது.

    இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மலேஷியாவை 7-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் போலந்தை இந்தியா வீழ்த்தியது.

    புள்ளிகள் அடிப்படையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியும் போலந்து அணியும் மோதின. இதில் 6-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்றது.

    பெண்கள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்திய மகளிர் அணி இழந்தது.

    மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிசின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி கோப்பையை கைப்பற்றினார். #MonteCarlo #Fognini
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் மோதினர்.

    தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MonteCarlo #Fognini
    நாமக்கல் அருகே நடைபெற்ற மாநில பெண்கள் கைப்பந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றது. #DRSivanthiClub
    நாமக்கல்:

    பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் அருகே உள்ள தூசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் 6 அணிகள் பங்கேற்றன.

    லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 2-வது இடத்தை பிடித்த பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த கோவை கிருஷ்ணாம்பாள் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவந்தி கிளப் செயலாளர் சித்திரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொருளாளர் அருணகிரி, செயலாளர் சதாசிவம், இணை செயலாளர்கள் சிவநேசன், கனகராஜ் மற்றும் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DRSivanthiClub
    ×