search icon
என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் இத்தாலி வீரர் பெரேட்டேனி சாம்பியன் பட்டம் வென்றார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.

    இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியைச் சந்தித்தது.

    ஒரு மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.

    யூகி பாம்ப்ரி ஜோடி பெற்ற இரண்டாவது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்
    • பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.

    சுவட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த  2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

     

    ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள்  நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால்  மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைட்ரஜனாலும், 20.95% ஆக்சிஜனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஆக்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும்.

     

    தீராத நோயினால்  பாதிக்கப்பட்டுள்ள  நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை  எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை  இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last Resort] அமைப்பு வரவேற்றுள்ளது.

    இந்த வகையில் மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே இந்த வசதி ஒருவருக்கு வழங்கப்படும்.

    அவ்வாறு மரணிக்க விரும்விபுவோர், இந்த கேப்சியூலில் உள்ளே படுத்துக்கொண்டு கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல், நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.

     

    அதற்கு பதிலளித்தபின் பட்டனை அழுத்தினால், உள்ளே காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயு 30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையிலேயே இருப்பார். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும்.  

    பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வகை கேப்சியூல்கள் சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. 

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது.
    • அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

    ஜெனீவா:

    ஆல்கஹால் மற்றும் போதை பொருளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

    உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் மதுவினால் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்றே குறைந்திருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 20-ல் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 சதவீதம் ஆகும். அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.

    2019-ம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக 13 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    மதுவினால் 2019-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 16 லட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    இவர்களில் 4,74,000 பேர் இதய நோய்களாலும், 4,01,000 பேர் புற்றுநோயாலும், 7,24,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்ளிட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    9 ஆண்டுக்கு முன் 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019-ம் ஆண்டில் 5.5 லிட்டராகக் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.

    • சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது.
    • பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்து ஓட்டலில் இந்தியர்களை கவர்வதற்காக சுடிதார் உடையில் சேவை செய்யும் பெண்களின் வீடியோ வலைத்தளவாசிகளை கவர்ந்துள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இந்திய தம்பதியான சினேகா-வீரு ஆகியோர் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றபோது அங்கு பணியாற்றும் பெண்கள் அனைவரும் சிவப்பு நிற சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது அவர்களை வெகுவாக கவர்ந்தது. அதை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

    "வெளிநாட்டில் இந்திய உணவகங்களில் நுழைவது ஒரு கலாசார நேரமாக இருக்கும். சில ஓட்டல்களில் பணக்கார மரபுகள் மற்றும் பகட்டு அலங்காரங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக தோன்ற வைக்கும்.

    ஆனால் சுவிட்சர்லாந்து இந்திய உணவகத்தில் பணிப்பெண்கள் இந்தியர்களாக (சுடிதார்உடையில்) இருந்தபோது...." என்று பதிவிட்டு உள்ளனர்... அந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையைப் பெற்றது. பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
    • சீனா ஜனவரி 2024-ன்படி 500 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் SIPRI தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது. ஒன்று உக்ரைன்- ரஷியா போர். மற்றொன்று இஸ்ரேல்- காசா போர். இதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுங்களை கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த தொடங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

    உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் 90 சதவீதத்தை பெற்றுள்ளன. 2023-ல் மற்ற பல நாடுகள் புதிய அணு ஆயுதம் திறன் கொண்ட ஆயுதங்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மொத்தம் 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 172 அணுஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட எண்ணிக்கைளில் இரண்டு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. 2023 இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சிஸ்டத்தை முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனா மற்ற நாடுகளை விட அதிகவேகமாக அணுஆயுதங்களை வேகப்படுத்து வருவதாகவும், 2023-ல் 410 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தாகவும் தெரிவித்துள்ளது.

    • இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.
    • சீனா இந்த கூட்டத்தில் கலந்து கொள்வில்லை. ரஷியாவுக்கு அழைப்பு இல்லை.

    உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சுவிட்சர்லாந்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். மேலும் நாட்டின் அதிபர்கள் கலந்து கொண்டனர். பல நாடுகள் தங்களது நாட்டின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர். 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் (மேற்கு) பவன் கபூர் கலந்து கொண்டார். இரண்டு நாட்களில் நட்சத்திர ரிசார்ட்டில் இந்த கூட்டம் நடைபெற்றது.

    இதில் உக்ரைன் அமைதிக்கான கூட்டு அறிக்கை உருவாக்கப்பட்டு அதில் தலைவர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், இந்தியா இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திடவில்லை. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சீனா எதிர்ப்பு தெரிவித்து கலந்து கொள்வில்லை.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண ரஷியா இல்லாமல் அமைதிக்கான கூட்டு அறிக்கை உருவாகிய நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

    எங்கள் பார்வையில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். எங்களுடைய அணுகுமுறை தொடர்ந்து நிலையானதாக இருக்கும். பேச்சுவார்த்தை, ராஜாங்கரீதி வழியாக மட்டுமே அமைதியை அடைய முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.

    • உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.

    அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.

    இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

    அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

    என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது பலருக்கும் கனவாக உள்ளது. ஆனாலும் அதற்கான செலவு அதிகமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வெறும் ரூ.90 ஆயிரம் செலவில் 25 சுவிட்சர்லாந்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    இந்தியரான மெஹூல்ஷா தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் 11 நாட்களில் 25 சுவிட்ஸ் நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். அவர் தினமும் சுவிட்சர்லாந்தில் எந்தெந்த நகரங்களுக்கு சென்றனர் என்ற விபரங்களையும், 11 நாட்களும் சுற்றுலாவை எவ்வாறு மகிழ்ச்சியாக கழித்தனர் என்ற விபரங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. அவரது இந்த பதிவை சுமார் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 1-6 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதுகிறார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் நாட்டின் தாமஸ் மசாக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டை தாமஸ் வென்றார்.

    இறுதியில், தாமஸ் மசாக் 6-4, 0-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    ×