search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case filed"

    • வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
    • 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் என்பவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது.

    அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தது. நேற்று சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

    பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், ஆசீர் சாலமோன் ஆகியோர் சிகிச்சைக்கு சென்ற வழியில் இறந்தனர். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடியை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 286, 304(2), 9-பி, 1-பி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    அதேநேரத்தில் கிணறு தோண்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்காக மதுரையில் இருந்து குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் இன்ஸ்பெக்டர் சிங்கம் மேற்பார்வையில் கிணற்றுக்குள் வைத்து வெடிக்காமல் உள்ள 3 டெட்டனேட்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24).

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் கடந்த 25-ந்தேதி திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். இதையறிந்த சுமிகாவின் தந்தை முருகேசன் தாயார் பத்மா உள்பட 12 பேர் கும்பலாக முருகன் வீட்டுக்குள் சென்று சுமிகாவை அழைத்துள்ளனர்.

    ஆனால் சுமிகா அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அப்போது முருகனையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசிய கும்பல் சுமிகாவை பிடித்து இழுத்து ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மனைவி சுமிகாவை அவரது தந்தை முருகேசன், தாய் பத்மா, அண்ணன் சுமித் மற்றும் உறவினர்கள் உள்பட 12 பேர் சேர்ந்து காரில் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் சுமிகாவின் பெற்றோர் முருகேசன்-பத்மா உள்பட 12 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ வழக்குப் பதிவு செய்தார்.

    மேலும் கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக 5 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண் அவரது பெற்றோரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அதேபோல நெல்லையில் நடைபெற்ற இந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    சென்னை பாடி எம்.டி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமா பச்சையப்பன். இவர் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

    கொரோனா காலத்தில் வகுப்புகள் நடைபெறாமல் போனது. இதனால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே பள்ளிக்காக வங்கியில் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை.

    அதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் பள்ளிக்கு சீல் வைத்தது. இந்நிலையில் பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் உமா பச்சையப்பன் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    பின்னர் கடன் பெற்று தருவதாக உறுதி அளித்த நபரை சந்தித்தார். அப்போது அவர் ரூ.30 மதிப்பிலான ஸ்டாம்ப் மற்றும் பாண்டு பத்திரங்களை வாங்கி வரும்படி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இன்னொரு நபரை அறிமுகம் செய்தார். அதன்படி உமா அந்த நபரிடம் ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர் ஸ்டாம்ப் பேப்பர் எதுவும் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அந்த 2 பேரும் கூட்டு சேர்ந்து உமா பச்சையப்பனை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட உமாபச்சையப்பன் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு வேலை கேட்டு விண்ணப்பித்தபோது குட்டு அம்பலமானது.
    • அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்தது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் தூய்மை பணியாளராக உமா என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    இவரது வாரிசு என கூறி, மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் அரசு வேலை கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளார்.

    அவர் சமர்ப்பித்த வாரிசு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சேலம் மேற்கு தாலுகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி அந்த சான்றிதழை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஆன்லைனில் பெறப்பட்டது போல போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்யப்பட்டது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் இது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.

    மேலும் பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் பரமேஸ்வரன் மீது போலி ஆவணத்தை உண்மை ஆவணமாக தாக்கல் செய்தது, அதை உண்மை ஆவணம் என நம்ப வைத்தது, மோசடி ஆகிய பிரிவுகளில் குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் கந்தவேல், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.
    • பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் இருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசியல் கட்சியின் விழா நடைபெறுகிறது.

    இதற்காக எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.

    இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மேலும் சாலையை மறித்தும் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி எவ்வித அனுமதியும் இல்லாமல் விளம்பர பேனர் அச்சடித்த 7 அச்சக உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அகரம் கூட்டுச்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியே சென்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சின்னம்பேடு கிராமம், அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்த தளபதி(வயது30) என்று கூறினார்.

    மேலும், அவரது பையில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சுமார் ஏழு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம் பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ஜான்சிராணி(வயது 35). இவர்களுக்கு மோனிகா மேரி(12), ரித்திகாமேரி(9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவரின் நடவடிக்கையால் விரக்தியடைந்த ஜான்சிராணி 2 மகள்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி நேற்று வீட்டில் இருந்தபோது ஜான்சிராணி தனது முதல் மகள் மோனிகாமேரியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மயங்கினார்.

    பின்னர் கதவை பூட்டிவிட்டு 2-வது மகள் ரித்திகாமேரியுடன் வெளியே சென்ற ஜான்சிராணி விருதுநகர் மேம்பாலத்துக்கு வந்தார். அங்கு மேலே இருந்து தனது மகளை கீழே தள்ளிவிட்டு பின்னர் அவரும் குதித்தார். இதில் தாய்-மகள் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மோனிகாமேரியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் ஜான்சிராணி மீது கொலை முயற்சி செய்தது, தற்கொலைக்கு முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.85 லட்சத்தை இழந்தார்.

    பங்கு சந்தையில் ஏற்பட்ட பணத்தை சரி கட்டவும் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது பெயரில் 25 வெவ்வேறு திட்டங்களில் ரூ 7.40 கோடி இன்சூரன்ஸ் செய்தார்.

    பின்னர் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெறுவதற்காக தன்னைப் போன்று அடையாளம் உள்ள ஒருவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு உறுதுணையாக மனைவி மற்றும் 2 உறவினர்களை சேர்த்துக் கொண்டார்.

    கடந்த 8-ந் தேதி நிஜமாபாத் ரெயில் நிலையத்திற்குச் சென்ற அதிகாரியின் உறவினர்கள் அங்கிருந்த அப்பாவி வாலிபர் ஒருவரை வெங்கடாபூர் புறநகர் பள்ளத்தாக்கிற்கு காரில் கடத்தி வந்தனர். அதிகாரியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வாலிபருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தனர். வாலிபருக்கு அதிகாரியின் உடைகளை அணிவித்து காரின் முன் பகுதியில் உட்காரும்படி தெரிவித்தனர். அதற்கு வாலிபர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வாலிபரை கட்டை மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வாலிபரை காரின் முன் சீட்டில் உட்கார வைத்து காரின் உள்ளே வெளியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் எரிந்துபோன காரில் ஆண் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிஜமா பாத் போலீசார் காரின் அருகே இருந்த ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர்.

    அதில் அதிகாரியின் அடையாள அட்டை இருந்தது. அடையாள அட்டையில் இருந்த விலாசத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த அதிகாரி மற்றும் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் தன்னைப் போன்ற ஒருவரை கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னாடியே போலீசார் விரைவாக துப்பு துலக்கி கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கிருஷ்ணகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலமரத்துபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளிகோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது.

    இதன் உரிமையாளரான வளன்அரசு(வயது 51) கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ.84 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனை அவர் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில், கடந்த 10 வருடங்களாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அங்கு பணிபுரியும் ராஜபாளையத்தை சேர்ந்த முனிராஜ், காசாளராக பணிபுரியும் சோலைச்சேரியை சேர்ந்த இனியவன் மற்றும் கழுகுமலையை சேர்ந்த ஆறுமுகம் சண்முகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஈரோடு:

    சுதந்திர தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின மான நேற்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்ப டுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்கப்படுகிறதா? என பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வானது ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் நடத்தப்பட்டது.

    இதில் 88 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள ர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மாற்று விடுப்பு வழங்காமலும் விடுமுறை நாளில் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் பட்டியலை 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமலும் அதன் நகலை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ×