search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "88 பேர் பலி"

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பிப். 5-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 5-ம் தேதிவரை 2,522 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு இன்றுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகமாக ஜோத்பூரில் 28 பேர் இறந்துள்ளனர் என்றும், 11, 811 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 2,522 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது என்றும் என அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. #DelhiHighCourt #AntiSikhRiot
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

    டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள திரிலோக்புரியில் நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

    இது தொடர்பாக 1984-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 88 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 88 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 22 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.கே.குப்தா செசன்ஸ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    எனினும் குற்றவாளிகளில் பலர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.#DelhiHighCourt #AntiSikhRiot 
    ×