search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bypoll"

    கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 பேர் வாக்களித்தனர்.

    பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



    பாராளுமன்ற தொகுதிகளான சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இதேபோல், சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதமும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு மதியத்துக்குள் வெற்றி நிலவரம் வெளியாகும். மேலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #KarnatakaBypoll
    கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர்.



    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.

    பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #KarnatakaBypoll
    மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    கோலாலம்பூர்:

    மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

    முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார். 

    இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். 

    இதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.



    அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட வசதியாக போர்ட் டிக்சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சுமார் 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி வாக்காளர்களில் 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். அன்வர் இப்ராகிமை எதிர்த்து 6 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். 

    இன்றிரவு சுமார் 8 மணியளவில் வெளியான தகவலின்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 71 சதவீதம் வாக்குகளை பெற்ற அன்வர் இப்ராஹிம் 31 ஆயிரத்து 16 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வெறும் 7 ஆயிரத்து 456 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிக்கும் என்று வைகோ கூறினார்.
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அமோக வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், கவுரிசங்கர், கீரைத்துறை பாண்டியன் உடன் இருந்தனர்.
    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கிறது.

    ஜெயநகர் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 13–ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். #Karnataka #Jayanagar #Bypoll
    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தலுக்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13–ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது. #Karnataka #Jayanagar #Bypoll
    கைரானா மற்றும் நூர்புர் இடைத்தேர்தலில் தோற்றதற்கு கோடை விடுமுறையில் தொண்டர்கள் டூர் போனதே காரணம் என உத்தரப்பிரதேச பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி விளக்கமளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

    எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். “கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். இதனால், இடைத்தேர்தலில் தோற்றோம்” என லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. #ByPoll
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு ஆதரவு அளித்தன.

    கைரான தொகுதியில் வென்ற தபசும் ஹசன்

    இந்நிலையில், கைரானா தொகுதியில் தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக உறுப்பினர் மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பந்தாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி முகத்தில் உள்ளார்.

    இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.

    தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.

    மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகிதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. #bypoll
    உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கும் மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா தொகுதியில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா தொகுதியில் 42 சதவீதமும், பால்கர் தொகுதியில் 46 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது.

    மேலும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற மக்களவை தொகுதிகளின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக வெப்பத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை. மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. #KairanaBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.  

    இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே , உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளது.

    இன்று தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    ×