search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anwar Ibrahim"

    • டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்களது நாட்டில் தங்க விசா தேவையில்லை
    • மலேசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த வகையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்னுடைய மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதை அவர் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

    இருந்தபோதிலும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கியிருக்க விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலோசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4-வது இடத்தில் உள்ளது.

    மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனால் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளனர்.

    முன்னதாக, தாய்லாந்து இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தங்களது நாட்டிற்று வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    • ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • நடிகர் ரஜினிகாந்த், மலேசியா சென்றுள்ளார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    அன்வர் இப்ராஹிம்- ரஜினி

    இந்நிலையில், மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தார். அப்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம், நடிகர் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தின் 'மொட்ட பாஸ்' மேனரிசத்தை செய்து காண்பித்து அவரை வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    • ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

    அன்வர் இப்ராஹிம் - ரஜினி

    இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அன்வர் இப்ராஹிம் - ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார். அதாவது, மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.
    • புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மலேசியாவில் 222 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது. இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சார்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    இதற்கிடையே, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

    மலேசிய பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேசிய மன்னர் நியமித்தார். நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.

    இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மலேசியாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். இந்தியா-மலேசியா மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    கோலாலம்பூர்:

    மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

    முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார். 

    இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். 

    இதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.



    அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட வசதியாக போர்ட் டிக்சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சுமார் 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி வாக்காளர்களில் 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். அன்வர் இப்ராகிமை எதிர்த்து 6 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். 

    இன்றிரவு சுமார் 8 மணியளவில் வெளியான தகவலின்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 71 சதவீதம் வாக்குகளை பெற்ற அன்வர் இப்ராஹிம் 31 ஆயிரத்து 16 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வெறும் 7 ஆயிரத்து 456 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், மலேசியாவில் நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #KamalHaasan #AnwarIbrahim
    சென்னை:

    மலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன.

    தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.


    வீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார். அந்த வீடியோவில், அன்வர் இப்ராஹிமிக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

    வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.

    மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார். #AnwarIbrahim
    கோலாலம்பூர்:

    மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

    எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த அன்வரை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார்.

    அதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே தற்போதைய பிரதமர் மகாதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அன்வர் இப்ராகிம் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #AnwarIbrahim
    ஓரினச்சேர்க்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிம் பொதுமன்னிப்பு அடிப்படையில் 15-ம் தேதி விடுதலையாகிறார். #MalaysianleaderAnwarrelease
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், மன்னர் அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் 15-ம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார். #MalaysianleaderAnwarrelease
    ×