search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRS"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.
    • வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என கூறியது . அதனை உறுதி செய்யும் வகையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்தது.

    நாளை முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.

    வருகிற 9-ந்தேதி தெலுங்கானா முதல்- மந்திரி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரேவேந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இவ்வளவு நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெறும் நிலையில் உள்ள வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.

    கட்சித் தலைமையும் சிவகுமாருக்கு தெலுங்கானா விவகாரத்தை கவனிக்க முழு அதிகாரம் வழங்கி உள்ளது.

    • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    • 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகமுள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    106 தொகுதிளில் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 13 தொகுதிகளில் 4 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அனைத்து வாக்காளர்களும் வாக்களித்த நிலையில், 70.60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ஏழு முக்கிய வாக்குறுதிகளை அளித்தது பிரசாரம் மேற்கொண்டது. பா.ஜனதா கடும் சவால் கொடுக்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரசாரத்தில் களம் இறக்கியது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் வருகிற 3-ந்தேதி (நாளைமறுதினம்) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.

    • காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • அவரது சகோதரர் வாக்குச்சாவடிக்குள் 20 நபர்களுடன் உலா வருவதாக பிஆர்எஸ் புகார்.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    இதனால் தேர்தல் முறைகேடு ஏதும் நடந்து விடாமல் தடுக்க இரு கட்சி தொண்டர்களும் தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும், வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியின் சகோதரர் கொண்டால் ரெட்டி வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று தேர்தல் அதிகாரியுடன் பேசியதாக பிஆர்எஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கொண்டால் ரெட்டி வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பிஆர்எஸ் தொண்டர்கள் கூறியதாவது:-

    கொண்டால் ரெட்டி போலி பாஸ் உடன் வாக்குச்சாவடிகளில் உலா வருகிறார். அதோடு தேர்தல் அதிகாரிகளுடன் பேசுகிறார். மொத்தமாக 20 பேருடன் வளம் வருகிறார். மூன்று வாக்கு மையத்திற்குள் அவர்களுடன் கொண்டால் ரெட்டில் சென்றுள்ளார். அதுவும் வாகனத்துடன் சென்றுள்ளார். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. மையத்திற்கு வந்த பிறகு குண்டர்கள் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களுடன் சென்றவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். ஆனால், 10 நிமிடத்திற்குள் போலீசார் அவர்களை ரிலீஸ் செய்துள்ளனர். நாங்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" எனத் தெரிவித்தார்கள்.

    கொண்டால் ரெட்டி இதுகுறித்து கூறியதாவது:-

    நான் பொது முகவர். நான் வாக்குச்சாவடிக்கு சென்றேன். ஆனால், பிஆர்எஸ் தொண்டர்கள் என்னை தடுத்து நிறுத்தினார்கள். என்னுடைய வாகனைத்தையும் மறித்தார்கள். அவர்கள் என்னை தாக்க முயற்சித்தார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை தடுத்து நிறுத்தும் முயற்சியாக பிஆர்எஸ் கட்சியினர் எனது வாகனத்தை கடந்த 2 மணி முதல் 3 மணி வரை பின்தொடர்ந்தனர். நான் காலையில் இருந்து வாக்குச்சாவடி சென்று கொண்டிருக்கிறேன். நான் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

    இவ்வாறு கொண்டால் ரெட்டி கூறினார்.

    • 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரையும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு
    • 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரைக்கும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்திற்கு வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த இளம் வாக்காளர் ஒருவருடன் வாக்களிப்பது குறித்து பேசினார்.

    அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் எல்லா மொழிகளிலும் அபாரமாக ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர். அபுல்  ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

    வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய தெலுங்கானா சகோதர மற்றும் சகோதரிகள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் நபர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.

    முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

    பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

    2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • இரண்டு முறை பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடித்த நிலையில், 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம்.
    • இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்து, வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.

    இன்று (நவம்பர் 30-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நேற்று காலையில் இருந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இன்று காலை வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என பரிசோதித்து பார்க்கப்பட்டன. பின்னர், வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். 119 தொகுதிகளில் 2290 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகும்.

    3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.

    முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

    பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

    2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
    • பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

    திருப்பதி:

    மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கா் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்து விட்டது.

    தெலுங்கானா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

    சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

    மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3.26 கோடியாகும். 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.

    ஆளும் பி.ஆா்.எஸ்., முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பி.ஆா்.எஸ். தலைவரும் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

    சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அவரது தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் களமறங்கியுள்ளது.

    பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அளித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஐதராபாத்தில் 9 தொகுதிகளில் களத்தில் இருக்கிறது.

    மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலுங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

    இந்த 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்த தோ்தல்கள் கருதப்படுகிறது. தெலுங்கானாவில் வெற்றி யாருக்கு? என்ற பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

    தெலுங்கானாவில் முதல்முறையாக இந்த தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாதம் 9-ந் தேதி அமலுக்கு வந்தன. அப்போது முதல் நேற்று வரை, ரூ.737 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மதுபானங்கள், தங்கம், இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்படுகின்றன.

    மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீசார் மற்றும் 70 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தெலுங்கானாவில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அவர்கள் ஒரே அணி...இங்கே பி.ஆர்.எஸ், பா.ஜ.க, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஒரு அணியாகச் செயல்படுகிறார்கள். முதல் மந்திரி கே.சி.ஆர். மீது எந்த வழக்கும் இல்லை. ஊழல் மிகுந்த அரசை நடத்துகிறார்.

    பிரதமர் மோடிக்கு உதவுவதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி மீதும் எந்த வழக்கும் இல்லை. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையும் அவர்களுக்குப் பின்னால் இல்லை என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் உரையாடி ஓட்டு வேட்டை.
    • பா.ஜனதா தலைவர்கள், சந்திரசேகர ராவ் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் முடிவடைந்ததால் உள்ளூர் தலைவர்கள், தேசிய தலைவர்கள் தெலுங்கானா பக்கம் திரும்பினர்.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தெலுங்கானாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடைசி நாளான இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, இன்றைய பிரசாரத்தின்போது கேசிஆர் மக்களை சந்திக்காமல் பண்ணை வீட்டில் வசிக்கிறார் என விமர்சித்தார்.

    நேற்று பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ் கட்சிக்கு சென்றடையும். இதனால் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் சந்திரசேகர ராவ் கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் தலைவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    நாளை வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்குமையத்திற்கு கொண்டு செல்லப்படும். நாளைமறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.

    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன். 

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    • ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
    • சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

    ×