search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு

    • முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.
    • வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என கூறியது . அதனை உறுதி செய்யும் வகையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்தது.

    நாளை முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.

    வருகிற 9-ந்தேதி தெலுங்கானா முதல்- மந்திரி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரேவேந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இவ்வளவு நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெறும் நிலையில் உள்ள வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.

    கட்சித் தலைமையும் சிவகுமாருக்கு தெலுங்கானா விவகாரத்தை கவனிக்க முழு அதிகாரம் வழங்கி உள்ளது.

    Next Story
    ×