search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribery"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    நாகப்பட்டினம்:

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார்.
    • அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55), மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.

    அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதிப்பு.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு (வயது45).

    விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் பைப்புதைக்க, தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டார். அப்போது, வங்கி தரப்பில், நில மதிப்பு சான்று கேட்டனர்.

    இதையடுத்து ராஜவேலு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில் நில மதிப்பு சான்றிதழை பெற்றுத்தருவதாக கூறி, தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபநாசம் காப்பான் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (58) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    அரசு பணி செய்வதற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜவேலு, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தார்.

    இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரணை செய்து கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    அரசு தரப்பில் வக்கீல் முகமதுஇஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.

    • பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்

    அவினாசி :

    அவினாசி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நில அளவீடு, பெயர் மாற்றம், உள்ளிட்ட பணிகளுக்கு சென்றால் , நில அளவீடு செய்வதற்கு சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நில அளவையாளர் மோகன்பாபுவை நீலகிரி மாவட்டம் குந்தா வட்டத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

    • பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டி(வயது 40).

    இவர் அப்பகுதியில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் வாங்கிய 5 சென்ட் நிலத்திற்குரிய பட்டா பெயர் மாறுதல் செய்து தரகேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதி ரூ.8 ஆயிரத்தையும் தந்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்வேன் என சுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனைகையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை தங்கபாண்டியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த ரூபாய் நோட்டுகளுடன் இன்று பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனைகையும், களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    • லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.

    அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.

    லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.

    • அருணாச்சலம் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
    • ஜெயில் வார்டன்கள் அருணாச்சலத்தை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நெல்லை:

    தென்காசியை அடுத்த மேலகரம் என்.ஜி.ஓ. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 68). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    லஞ்ச வழக்கு

    வி.கே.புதூர் தாலுகா அலுவல கத்தில் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. நெல்லை நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மேல்முறையீடு செய்திருந்தார். அதிலும் அவர் லஞ்சம் பெற்றது நிருபிக்கப்பட்டதால் அவர் மீதான தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

    நெஞ்சு வலியால் சாவு

    இதன் காரணமாக கடந்த மாதம் அருணாச்சலம் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரனெ உடல்நலக்குறைவு ஏற்படவே, ஜெயில் வார்டன்கள் அவரை நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி அதிகமாகி உயிரிழந்தார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது :- இந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆனால்தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள். இலங்கை அதிபரான ராஜபட்சே இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என ஓடினார். அதே நிலைமை தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியின் போது குப்பை வரி உயர்த்துவதாக சொன்னதற்கே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இரண்டு அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் இன்று குப்பைக்கு வரி விதித்து இருக்கிறார். தி.மு.க.வுக்கு திருப்பூருக்கும் எப்போதும் ஒத்து வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் திருப்பூர் நாசமாக போகிறது. 2010 ல் தொழில் எல்லாம் மூடிப்போய் மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டு மக்கள் சென்றார்கள். இன்றைக்கு அதே போல ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வால் திருப்பூர் தொழில் நிலை முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாய ஆலை பிரச்சினை ஏற்பட்டு திருப்பூர் தொழில் முடங்கிய போது ஜெயலலிதா வட்டியில்லா கடனாக 213 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றினார்கள். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    திருப்பூருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்து இருக்கிறது. 1300 கோடி செலவில் நான்காவது குடிநீர் திட்டத்தினை கொண்டு வந்து இருக்கிறோம். ஏற்கனவே நிறைவேறி இருக்க வேண்டிய இந்த திட்டத்தினை மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒரு நன்மையும் மக்களுக்கு செய்யாத தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உடனடியாக நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை முடித்து திருப்பூர் மக்களுக்கு திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

    தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்து விட்டது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

    • பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது.
    • ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்;

    பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு கோவில் பூசாரி ரங்கசாமி வீட்டிற்கு சென்று விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது கோவிலில் உள்ள இரும்பாலான உண்டியலின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கோவில் பூசாரி ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடைக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இதே போல் சேளுர் சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுமார் 47 அடி உயரமுள்ள முனியப்பன் சாமி கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் அந்த உண்டியலை உடைக்க முடியாதததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கோவில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றுள்ளனர். ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வராதவர்கள்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர், அறையில் உள்ள பழைய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் அங்கிருந்த தாசில்தார் விஜய் பிரபாகரன், தலைமை யிடத்து துணை வட்டா ட்சியர் பானுப்பிரியா ஆகியோரிடம் பட்டா மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய் ஆய்வாளர்களிடம் எவ்வளவு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    ஏன் நிலுவையில் உள்ளது? என்பது குறித்து விபரங்களைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துவிட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டர் அங்கு காத்திருந்த பொது மக்களிடம் எதற்காக வந்து காத்துள்ளீர்கள் என கேட்டறிந்தார்? அப்பொழுது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவி த்தொகை பெறு வதற்காக வந்ததாக கூறினார்.

    உடனடியாக அங்கிருந்த சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார். மேலும் ஒரே வேலைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் நில அளவைப் பிரிவில் 2 மாதமாக நிலம் அளவை செய்ய இழுத்தடிப்பதாகவும், மேலும் நிலம் அளவை செய்ய லஞ்சம் கேட்பதாகவும் கூறினார். அதற்கு மாவட்ட கலெக்டர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்க்கு தகவல் தெரிவியுங்கள் என கூறினார். தொடர்ந்து பொது மக்களை அலைக்கழிப்பு செய்யாமல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    • சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • குவாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத்தில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மணல் கொள்ளையடிக்கும் மணல்குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர்.

    செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பளம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளின் நடவடி க்கைகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளோ லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.இதனிடையே மருதம்பள்ளம் சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது.இதுவரை 20 அடி ஆழத்தையும் தாண்டி மண் எடுத்ததால் நீர் சுரந்து ஏரிப்போன்று அப்பகுதி காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக்கோரி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர்செ ல்வம், சிபிஎம் ஓன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். சித்தம்பாடி குவாரியால் சுற்றியுள்ள விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குவாரியை யொட்டியுள்ள பயிரி டப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் முறையாக வளராமல் உள்ளதாகவும்.

    தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்ப ட்டால் வழக்கமாக பயிரிட ப்பட்டு வந்த நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகியவற்றை கைவிட்டு விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம் கூறியதோடு பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவித்து விட்டு திரும்பும் திசையெ ல்லாம் குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் ஏராளமான குவாரிகள் செயல்பட அனுமதியளித்துள்ள கணிம வளத்துறை இதைப்ப யன்படுத்தி சட்டவி ரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனுமதிய ளித்திருக்கிறது.

    இப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலை விலேயே கடற்கரை உள்ளதால் மணல் குவாரிகள் அதிகளவு ஆழத்தை தோண்டுவதால் விவசாய பகுதிகளில் உப்புநீர் புகுந்து வருவதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. என்றார். உடனடியாக சித்தம்பாடி குவாரியை மூடவில்லையெனில் போரா ட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

    ×